Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாண்டஸுக்கு பிறகு.. இந்த ஆண்டின் முதல் புயல் மோக்கா! பெயர் வைத்தது யார் தெரியுமா? எங்கு பாதிக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டின் முதல் புயலாக மோக்கா வரும் 7ஆம் தேதி வங்கக் கடலில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகாலம் தொடங்கிவிட்டது! வெயில் சுல்லென்று அடிக்கிறது. இந்த கோடைக்கு இதமாக மக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட கோடை வாசஸ்தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.

ஆனால் கோடை வெயிலின் சூட்டை குறைக்க கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சாரல் மழையையும் சில இடங்களில் கனமழையையும் கொடுக்கிறது.

2023s first Cyclone Mocha will form in Bay of Bengal?

இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் வரும் 7ஆம் தேதி உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த வாரம் 10-ஆம் தேதி அல்லது 11 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது தற்போது ஏற்பட்டுள்ள வானிலை காரணிகளை வைத்து புயல் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

அப்படியே புயல் உருவானாலும் இது இந்த ஆண்டின் முதல் புயல் என்றும் இதற்கு மோக்கா என்றும் பெயரிடப்படலாம் என தெரிகிறது. இந்த பெயரை ஏமன் சூட்டியுள்ளது. இதற்கு முன்னர் யாஸ், ஆம்பன் உள்ளிட்ட புயல்கள் மே மாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இது எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்பதை பொருத்தே புயல் எந்த இடத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கணிக்க முடியும்.

வங்கக் கடலில் கடந்த காலங்களில் உருவான புயல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. அந்த வகையில் தற்போது இந்த புயலின் வழித்தடத்தை மாநில அரசு கண்காணித்து வருகிறது. பொதுவாக கடலில் அதிக அளவுக்கு வெப்பமும் குறைந்த காற்றும் இருந்தால் அதுவே புயல் உருவாக உகந்த சூழலாகும்.

2023s first Cyclone Mocha will form in Bay of Bengal?

மே மாதம் உருவாகும் புயல்களை கணிப்பதே கடினம் என்கிறார்கள், கடந்த 2019ஆம் ஆண்டு ஃபனி புயல் திடீரென உருவாகி ஒடிஸாவை தாக்கி அங்கு அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தியது என்பதால் ஒடிஸா பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். அது போல் தாழ்வாக வசிக்கும் இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்.

வரும் 7ஆம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு சிறிய படகுகள், கப்பல்களை வைத்திருக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்திய பெருங்கடல் பகுதியில் ஏப்ரல் மே மாதம் ஆகிய காலமும் பருவகாலம் ஆகும். மே மாதம் அளவுக்கு அதிகமான புயல்கள் உருவாகியுள்ளன. அக்டோபர்- நவம்பர்- டிசம்பர் ஆகிய காலங்களிலும் புயல் உருவாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+