மாண்டஸுக்கு பிறகு.. இந்த ஆண்டின் முதல் புயல் மோக்கா! பெயர் வைத்தது யார் தெரியுமா? எங்கு பாதிக்கும்?
சென்னை: இந்த ஆண்டின் முதல் புயலாக மோக்கா வரும் 7ஆம் தேதி வங்கக் கடலில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைகாலம் தொடங்கிவிட்டது! வெயில் சுல்லென்று அடிக்கிறது. இந்த கோடைக்கு இதமாக மக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட கோடை வாசஸ்தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.
ஆனால் கோடை வெயிலின் சூட்டை குறைக்க கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சாரல் மழையையும் சில இடங்களில் கனமழையையும் கொடுக்கிறது.

இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் வரும் 7ஆம் தேதி உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த வாரம் 10-ஆம் தேதி அல்லது 11 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது தற்போது ஏற்பட்டுள்ள வானிலை காரணிகளை வைத்து புயல் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்படியே புயல் உருவானாலும் இது இந்த ஆண்டின் முதல் புயல் என்றும் இதற்கு மோக்கா என்றும் பெயரிடப்படலாம் என தெரிகிறது. இந்த பெயரை ஏமன் சூட்டியுள்ளது. இதற்கு முன்னர் யாஸ், ஆம்பன் உள்ளிட்ட புயல்கள் மே மாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இது எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்பதை பொருத்தே புயல் எந்த இடத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கணிக்க முடியும்.
வங்கக் கடலில் கடந்த காலங்களில் உருவான புயல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. அந்த வகையில் தற்போது இந்த புயலின் வழித்தடத்தை மாநில அரசு கண்காணித்து வருகிறது. பொதுவாக கடலில் அதிக அளவுக்கு வெப்பமும் குறைந்த காற்றும் இருந்தால் அதுவே புயல் உருவாக உகந்த சூழலாகும்.

மே மாதம் உருவாகும் புயல்களை கணிப்பதே கடினம் என்கிறார்கள், கடந்த 2019ஆம் ஆண்டு ஃபனி புயல் திடீரென உருவாகி ஒடிஸாவை தாக்கி அங்கு அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தியது என்பதால் ஒடிஸா பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். அது போல் தாழ்வாக வசிக்கும் இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்.
வரும் 7ஆம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு சிறிய படகுகள், கப்பல்களை வைத்திருக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்திய பெருங்கடல் பகுதியில் ஏப்ரல் மே மாதம் ஆகிய காலமும் பருவகாலம் ஆகும். மே மாதம் அளவுக்கு அதிகமான புயல்கள் உருவாகியுள்ளன. அக்டோபர்- நவம்பர்- டிசம்பர் ஆகிய காலங்களிலும் புயல் உருவாகும்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications