Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரொட்டிக்கு கையேந்தும் இலங்கை மக்கள்! அரவணைக்கும் தமிழகம்! நெருக்கடியால் அகதிகளாக வந்த 21 பேர்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனைக்கு வந்த 21 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையானது நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் கடும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அங்கு நாளுக்கு நாள் நிலைமை மிக மோசமாகி வருகிறது. ஊரடங்கு, ராணுவம் குவிப்பு போன்ற நடவடிக்கைகள் பலன் கொடுக்காத நிலையில் மக்கள் போராடி வருகின்றனர்.

இலங்கை நெருக்கடி

இலங்கை நெருக்கடி

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் கியாஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது எரிபொருளுக்காக நாட்டின் மக்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலங்கை நாட்டின் தலைநகரான கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதலே கேஸ் சிலிண்டர்கள் வாங்க மக்கள் காத்திருக்கின்றனர் .

வாழவே சிரமம்

வாழவே சிரமம்

ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே சிலிண்டர் கிடைப்பதாகவும் சமையல் எரிவாயுவுக்கும் கடும் தட்டுப்பாடு உருவாகியுள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக ரொட்டி, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். தங்கள் அத்யாவசிய தேவைக்காக தங்கம் உள்ளிட்ட தாங்கள் சேர்த்து வைத்துள்ள பொருட்களை விற்றாலும், தேவையான பொருட்களை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.

தமிழகம் வரும் மக்கள்

தமிழகம் வரும் மக்கள்

எந்­த­வி­த­மான அத்­தி­யா­வ­சியப் பொருள்­களும் கிடைக்­கா­மல் மக்­கள் திண்­டாடி வரு­வதால் அகதிகளாக தமிழகம் வரும் இலங்கை மக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இலங்­கை­யில் இருந்து பட­கு­களில் வந்து சேரும் தமி­ழர்­களை பட­கோட்­டிகள் தனுஷ்­கோடி அருகே உள்ள கடற்­ப­கு­தி­யில் காணப்­படும் மணல்­திட்­டில் இறக்­கி­விட்டு மீண்­டும் இலங்­கைக்கு திரும்­பிச் சென்று­வி­டு­கின்­ற­னர். இந்­நி­லை­யில் இலங்­கை­யில் இருந்து சில குடும்­பங்­கள் தமி­ழ­கம் வந்து சேர்­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

21 பேர் அகதிகளாக வந்தனர்

21 பேர் அகதிகளாக வந்தனர்

இந்நிலையில், இலங்கையிலிருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். தனுஷ்கோடிக்கு அருகே அரிச்சல்முனைக்கு வந்த 21 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாட்டில் இருந்து ஏற்கனவே 20 நபர்கள் தமிழகம் வந்த நிலையில், தற்போது மேலும் 21 பேர் வந்துள்ளதால் இதுவரை தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+