மின்சார ரயில்கள்.. திடீர்னு தெற்கு ரயில்வே பரபரப்பு தகவல்.. இன்றும் நாளையும் நோட் பண்ணுங்க மக்களே
சென்னை: இன்றிலிருந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை துவங்கி உள்ள நிலையில், தெற்கு ரெயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
ஆயுதபூஜையை முன்னிட்டு, 4 நாட்கள் தொடர் விடுமுறை துவங்கி உள்ளது.. இதனால், முன்கூட்டியே பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகிவிட்டனர்.

ரயில்களில் ஏற்கனவே, புக்கிங் நடந்து முடிந்துவிட்டது.. இதனால், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் பயணிகளால் நிரம்பி வழிகிறது.
பயணிகள் கூட்டம்: தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியலும் வேகமாக உயர்ந்தது... இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும், கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
இதுஒருபக்கமிருந்தாலும், தற்போது தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.. அந்தவகையில், நாளைய தினம், 23 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் இன்றும் (21-ந்தேதி), நாளையும் (22-ந்தேதி) ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி: அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 11.20 மணிக்கு புறப்படும் ரெயில் சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, நாளை மூர்மார்க்கெட்டிலிருந்து சூலூர்பேட்டைக்கு காலை 4.20, 5 மணி, 5.20, 7.30, 7.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு காலை 5 மணி, 5.40, 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் சேவைகள் ரத்தாகிறது.
மூர்மார்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 5.40, 6.25, 6.50, 8.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு காலை 3.50, 4.50, 5.10, 6 மணி, 8 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எண்ணூர்: இதேபோல, சென்னை கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு காலை 5.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மறுமார்க்கமாக பொன்னேரியிலிருந்து கடற்கரைக்கு காலை 6.45 மணிக்கு புறப்படும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
எண்ணூரிலிருந்து திருவள்ளூருக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் ரெயிலும், பொன்னேரியிலிருந்து மூர்மார்கெட்டுக்கு காலை 7.50 மணிக்கு புறப்படும் ரெயிலும், ஆவடியிலிருந்து எண்ணூருக்கு காலை 5 மணிக்கு புறப்படும் ரெயில், திருவள்ளூரிலிருந்து பொன்னேரிக்கு காலை 5.20 மணமணிக்கு புறப்படும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
சிறப்பு ரயில்கள்: மொத்தமாக இன்று 3 ரெயில் சேவையும், நாளை 23 ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை மூர்மார்கெட்-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இன்று இரவு 10.45, 11.20 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். நாளை காலை 4.20, 5 மணி, 5.20, 5.40, 6.25, 6.50, 7.30, 7.45, 8.15 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications