டைகர் கா ஹுக்கும்! அம்பத்தூரில் திமிறிய வடமாநிலத்தவர்கள்.. அதிரடியாக 28 பேரை தட்டி தூக்கிய போலீஸ்
சென்னை: சென்னை அம்பத்தூரில் ஆயுதபூஜையன்று வடமாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்ட சண்டையை விலக்கி விட சென்ற போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைதான நிலையில் தற்போது மேலும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் அடுத்து உள்ள பட்டரவாக்கம் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த 23ம் தேதி அதாவது ஆயுதபூஜை தினத்தன்று இவர்கள் கூட்டமாக தொழிற்சாலை வாசலில் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். சண்டையை விலக்கிவிட தொழிற்சாலை மேனேஜர் முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. இதனையடுத்து வேறு வழியின்றி காவல்துறைக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவித்துள்ளார்.

புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் ரகுபதி, ராஜ்குமார் உள்ளிட்டோர் வடமாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்டிருந்த சண்டையை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் வடமாநில தொழிலாளர்கள் குடிபோதையில் இருந்ததால், தடுக்க வந்த போலீசாரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து கூடுதல் போலீசாரை வரவழைத்துள்ளனர். ஆனால் அதற்குள் காவலர் ரகுபதி சரமாரியாக தாக்கப்பட்டிருக்கிறார். அவரை மீட்ட சக காவலர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் குவிந்த கூடுதல் போலீசார் சண்டையில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்களை விரட்டியுள்ளனர். அதேபோல காவலர் மீது தாக்குதல் நடத்தியதாக சிசிடிவி காட்சியின் அடிப்படையில் 5 பேரை கைது செய்துள்ளனர். மறுபுறம் போலீசாரை வடமாநில தொழிலாளர்கள் விரட்டி தாக்கும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து இந்த வீடியோவை கொண்டு நேற்றிரவு முதல் விடிய விடிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 28 வடமாநில இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை செங்குன்றம் காவல்துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சண்டையை தடுக்க வந்த போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் வேறு யாரேனும் ஈடுபட்டிருக்கிறார்களா? என இவர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒருவேளை ஈடுபட்டிருந்தால் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் கூறியுள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
எப்பா தம்பிகளே! கொரோனாவுல உங்களுக்கு ஆல் பாஸ் போட்டது நான்தான்! அதிமுகவை மறக்கலாமா? இபிஎஸ் கலகல -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications