தமிழகத்தில் இன்று 29272 பேருக்கு கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 298 பேர் பலி.. முழு விவரம்!
சென்னை: தமிழகத்தில் இன்று 29272 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தமிழகம் இன்று தொட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலை இப்போதுதான் தமிழகத்தில் உண்மையான வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.
கடந்த வாரங்களில் கொஞ்சம் குறைவாக கேஸ்கள் பதிவான நிலையில் தற்போது தினசரி கேஸ்கள் 25 ஆயிரத்தை தினமும் தாண்டி வருகிறது. கிட்டத்தட்ட 28-29 ஆயிரம் கேஸ்கள் தினசரி பதிவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று
தமிழகத்தில் இன்று 29272 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 19182 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 162181 ஆக உயர்ந்துள்ளது.

பலி
தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 298 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் தினசரி பலி எண்ணிக்கை புதிய உயரத்தை தொட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 16178 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

சோதனை
தமிழகத்தில் இன்று 156111 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 149717 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 23853216 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் இன்று 7466 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.37713 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 2650 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 14324 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டில் 2419 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 13038 பேர் செங்கல்பட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications