சென்னையில் 2024 ஜன. 16-.18 வரை சர்வதேச புத்தக கண்காட்சி - மொழிபெயர்ப்புக்கு ரூ.3 கோடி மானியம்!
சென்னை: தமிழ்நாடு அரசின் சர்வதேச புத்தக கண்காட்சி 2024-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி முதல் ஜனவரி 18-ந் தேதி வரை சென்னையில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த ஜனவரியில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சியுடன் சர்வதேச புத்த கண்காட்சியும் இணைந்து இடம்பெற்றிருந்தது. நடப்பாண்டில் சர்வதேச புத்தக கண்காட்சி தனித்து நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக சென்னையில் இன்று பேசிய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை வர்த்தக மையத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி முதல் ஜனவரி 18-ந் தேதி வரை சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் என்றார். மேலும் மொழிபெயர்ப்புக்கான மானியமாக ரூ.3 கோடி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
#CIBF2024@tnschoolsedu pic.twitter.com/A6z4CeFhmE
— Anbil Mahesh (@Anbil_Mahesh) June 7, 2023

இது தொடர்பாக சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுத் தலைவர் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கூறுகையில், வரும் 2024 சர்வதேச சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். சர்வதேச புத்தகக் கண்காட்சியின் கெஸ்ட் ஆஃப் ஹானர் நாடாக மலேசியா அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு செல்லும் படைப்புகளுக்காக மொழிபெயர்ப்பிற்கான மூன்று கோடி ரூபாய் மானியத்தையும் முதல்வர் அறிவித்தார். வரும் ஆண்டு சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்ற ஆண்டைபோல அல்லாமல் வழக்கமான புத்தகக் கண்காட்சியுடன் அல்லாமல் சென்னை வர்த்தக மையத்தில் தனியே நடைபெறும் என்றார்.













Click it and Unblock the Notifications