தமிழ்நாட்டில் வெயில் கொளுத்த போகுதாம்! எவ்வளவு டிகிரி செல்சியஸ் உயரும்? வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதேநேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மே மாதம் தமிழகத்தில் வெயில் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது.

ஆய்வு மையம் தகவல்
இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மதிய வேளையில் வீடுகளை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மாலையிலேயே வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. தற்போது மழை இல்லை. இதனால் வெயில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்,.

மிதமான மழை
வெப்பம் அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளthu. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய பெருங்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

3 டிகிரி அதிகரிப்பு
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இயல்பை விட அதிகபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இளநீர் விற்பனை
காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்துள்ள வெயிலால் குளிர்பானங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதுதவிர பழச்சாறு, இளநீர், தர்பூசணி உள்ளிட்டவைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications