வாயுக் கசிவுக்குள்ளான திருவொற்றியூர் பள்ளி மீண்டும் திறப்பு! 3 மாணவிகள் மயக்கம்! இன்று விடுமுறை
சென்னை: சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மேலும் 3 மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் வாக்குவாதம் செய்ததை அடுத்து இன்று அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வாயுக் கசிவு ஏற்பட்டதை அடுத்து பள்ளி மாணவர்கள் சிலருக்கு வாந்தி மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

அதாவது பள்ளியில் வாயுக் கசிவு என்ற ஒரு விஷயத்தை தங்களிடம் சொல்லாமல் மாணவர்களை அவர்களாகவே வீடுகளுக்கு அனுப்பி வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னதும் பதறியடித்துக் கொண்டு வந்தால் மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி சொல்லாமல் கொள்ளாமல் அனுப்பி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது என பெற்றோர் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அந்த மயங்கிய மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்தை திமுக எம்பி கலாநிதி வீராசாமி ஆய்வு செய்தார். மேலும் எங்கிருந்த வாயு கசிவு வந்தது என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாயுக் கசிவுக்கான காரணத்தை சொல்லுமாறு கேட்டனர். அதற்கு பள்ளி நிர்வாகமோ அது குறித்து எதுவும் தெரியவில்லை என சொல்லவே பெற்றோர் கொந்தளித்துவிட்டனர்.
வாயுக் கசிவு எதனால் ஏற்பட்டது என்றே தெரியாத போது பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது என கேட்டுக் கொண்டிருந்த நிலையில் சில மாணவிகள் தங்கள் வகுப்புக்குச் சென்றனர். அப்போது திடீரென 3 மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மேலும் சிலருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவொற்றியூர் பள்ளிக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications