** நான் யாரு தெரியுமா? ரிச்சி ஸ்ட்ரீட்டில் யூட்யூபருக்கு மிரட்டல்!’கிக்கில்’ அத்துமீறிய மூவர் கைது!
சென்னை: சென்னையின் பிரபலமான எலக்ட்ரானிக்ஸ் மார்க்கெட் பகுதியான ரிச்சி ஸ்ட்ரீட்டில் பிரபல யூடியூபர் A2D நந்தகுமாரை மதுபோதையில் மிரட்டல் விடுத்ததோடு, அவரது கேமராவை பறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை பெற்றது. தமிழகத்தின் தலைநகரிலேயே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மூவரை கைது செய்துள்ளனர் சென்னை பெருநகர காவல்துறையினர்.
சென்னை அண்ணா சாலை முடிவடையும் இடத்திற்கு அருகே ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அமைந்துள்ளது. இதற்கு எதிர்ப்புறம் ஒரு சிறிய சந்து போல ரிச்சி ஸ்ட்ரீட் உள்ளது. இங்கு செல்போன்கள், லேப்டாப்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிக அளவில் விற்கப்படுகிறது.

சென்னையின் எலக்ட்ரானிக்ஸ் சந்தையாகவும் இது பார்க்கப்படுகிறது. இங்கு கிடைக்கும் பொருட்கள் விலை குறைவானதாகவும், பிராண்டுகளின் ஃபர்ஸ்ட் காப்பி விற்கப்படுவதாலும் ஏராளமானோர் அங்கு குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் பிரபல யூட்யூபரான நந்தகுமார் அங்கு சென்றிருக்கிறார். இவர் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த தகவல்களை தனது A2Dyoutube சேனலில் வழங்கி வருகிறார். இவரை பல ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்கின்றனர். அது மட்டும் அல்லாமல் புதிதாக சந்தையில் வெளியாகி இருக்கும் செல்போன்கள், லேப்டாப்கள், கேட்ஜெட்கள் குறித்து ரிவ்யூகளையும் தனது சேனலில் வழங்கி வருகிறார். மேலும் இந்தியா முழுவதும் பயணம் செய்து தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் சந்தையான ரிச்சி ஸ்ட்ரீட்டுக்கு சென்றபோதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது. தனது நண்பருடன் கேமராவில் வீடியோ எடுத்தவாறு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரிடம் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததோடு தான் மிகப்பெரிய ரவுடி.. தான் சொன்னால் அனைவரும் வந்து விடுவார்கள்.. எனக்கூறி ஆட்டோ ஒன்றின் அருகில் அழைத்துச் சென்றார்.
அந்த ஆட்டோவில் மேலும் சிலர் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை மிரட்டி கேமராவை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அங்கிருந்த ஒருவர் மது போதையில் இருந்த இளைஞர்களிடம் பேசி கேமராவை பெற்று தந்தார். இதை அடுத்து தனது சேனலில் அந்த வீடியோவை யூடியூபர் நந்தகுமார் வெளியிட்டு இருந்தார். மேலும் இந்த வீடியோவை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்ந்தனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு நடந்த இரண்டாவது நாளே தலைநகர் சென்னையில் போதையில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவது சட்டம் ஒழுங்கு இல்லாத நிலையை வெளிப்படையாக காட்டுவதாக அதிமுகவினரும் நாம் தமிழர் கட்சியினரும் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தனர்.
மேலும் பிரபல யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி இந்த வீடியோவை ட்விட்டரில் சென்னை காவல் துறையை டேக் செய்து வெளியிட்டார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை உறுதியளித்தது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர்களை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications