ரயில்களில் பட்டாசு எடுத்துப்போனால் ஜெயிலுதான்.. தண்டனையை பாருங்க.. ரயில்வே அதிரடி.. தீபாவளி வேற வருதே
சென்னை: ரயில்வேயில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.. விரைவில் தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் சூழலில், திடீர் கட்டுப்பாடுகளும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தியன் ரயில்வேயை பொறுத்தவரை, நாட்டிலேயே மிகப்பெரிய நெட்வொர்க்காக திகழ்ந்து வருகிறது.. அந்தவகையில், நாளுக்கு நாள் ரயில் சேவைகளின் தவிர்க்க முடியாததாகிவிட்டது.. அதனால்தான், பயணிகளின் நலன்கருதி, ரயில்வேயில் புது புது சலுகைகளும், விதவிதமான அறிவிப்புகளும் வெளியிட்ட வண்ணம் உள்ளன..

பாதுகாப்பு: பயணிகளின் பாதுகாப்பை கருதி, ரயில்களில் சில பொருட்களை கொண்டு செல்வதற்கு இந்தியன் ரயில்வே தடை விதித்திருக்கிறது.. குறிப்பாக, எளிதில் தீப்பற்றக்கூடிய மதுபானம், எரிவாயு சிலிண்டர்கள், அமிலம், பெட்ரோல், டீசல், வெல்டிங்க், ஈரமான தோல்கள், உலர்ந்த புல், இலைகள், கழிவு காகிதம், இறந்த கோழி, அரிக்கும் அமிலப் பொருட்கள் போன்றவற்றை எடுத்து செல்ல கூடாது.
அப்படி எடுத்து சென்றால், ரயில்வே சட்டம் 1989-ன் படி, பிரிவு 67, 164, 165 ஆகிய பிரிவுகளின் அதுவும் தண்டனைக்குரிய சட்டமாகும்.. அந்தவகையில் பட்டாசுகளையும் ரயிலில் கொண்டு செல்லக்கூடாது.. விரைவில் தீபாவளி பண்டிகை நெருங்க உள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே விதித்துள்ளது.
ரயில்வே அதிகாரிகள்: இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் சொல்லும்போது, "ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பதில்லை. எனினும் ஒருசிலர் விதிமீறல்களில் ஈடுபட்டு விடுகிறார்கள்.. இதனால் அவர்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற பயணிகளுக்கும் சேர்த்தே ஆபத்து விளைகிறது. எனவே, விதியை மீறி பட்டாசு கொண்டு சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்முறையாக பட்டாசுகளுடன் பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதி மீறல்களில் ஈடுபட்டால் 3 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்...
விழிப்புணர்வு: அடுத்த வாரம் ரயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்து ஆர்பிஎப் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். அத்துடன் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் நவீன ஸ்கேனர்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பயணிகளின் உடமைகளை சோதனை செய்ய உள்ளோம்" என்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications