30 நாட்கள் தான் கெடு... தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தாங்கள் செய்த செலவு கணக்கை முறையாக பராமரிக்குமாறு தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியிருந்தது.

மேலும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் செலவு கணக்கை சமர்பிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் செலவு

தேர்தல் செலவு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அதில் வெற்றிபெற்றவர்களும் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு அடுத்தப்படியாக உள்ள பணி என்னவென்றால் செலவு கணக்கை சமர்பிக்க வேண்டியவை தான்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தேர்தல் அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கணக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாத படி அறிவிப்பு வெளியிடப்படும் என எச்சரித்துள்ளது.

தோராயம்

தோராயம்

இதனிடையே தேர்தலில் பல லட்சம் ரூபாயை தண்ணீராக வாரி இறைத்த வேட்பாளர்கள், தாங்கள் செலவு செய்த முழுத்தொகையை பற்றி குறிப்பிடாமல் தோராய கணக்கை சமர்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+