30 நாட்கள் தான் கெடு... தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தாங்கள் செய்த செலவு கணக்கை முறையாக பராமரிக்குமாறு தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியிருந்தது.
மேலும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் செலவு கணக்கை சமர்பிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் செலவு
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அதில் வெற்றிபெற்றவர்களும் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு அடுத்தப்படியாக உள்ள பணி என்னவென்றால் செலவு கணக்கை சமர்பிக்க வேண்டியவை தான்.

தேர்தல் ஆணையம்
30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தேர்தல் அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கணக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள்
தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாத படி அறிவிப்பு வெளியிடப்படும் என எச்சரித்துள்ளது.

தோராயம்
இதனிடையே தேர்தலில் பல லட்சம் ரூபாயை தண்ணீராக வாரி இறைத்த வேட்பாளர்கள், தாங்கள் செலவு செய்த முழுத்தொகையை பற்றி குறிப்பிடாமல் தோராய கணக்கை சமர்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications