என்னாச்சு.. நடுவுல கொஞ்சம் மழையை காணோமே.. காலை வாரிவிடுகிறதா தென்மேற்கு பருவமழை?
சென்னை: தென்மேற்கு பருவமழையால் நாட்டின் 30% மாவட்டங்களுக்கு போதுமான மழை கிடைக்கவில்லை என்கிறது புள்ளி விவரங்கள்.
தென்மேற்கு பருவமழையானது இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக 12 நாட்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. ஆனால் நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.

30% மாவட்டங்களில் குறைவு
மொத்தம் உள்ள 683 மாவட்டங்களில் 201 மாவட்டங்கள் அதாவது 30% மாவட்டங்கள் சராசரிக்கும் குறைவான மழை அளவையே பெற்றிருக்கின்றன. நடபாண்டில் தென்மேற்கு பருவமழையானது ஜூன் 1-ந் தேதி பெய்ய தொடங்கியது. ஜூலை 8-ந் தேதிக்குள் தென்மேற்கு பருவமழையால் அனைத்து பகுதிகளுக்கும் மழை கிடைக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூன் 26-ந் தேதியே இந்திய வானிலை மையம், நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமே மழை பொழிவு கிடைத்திருக்கிறது என தெரிவித்தது.

சராசரிக்கும் குறைவான மழை
ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 12-ந் தேதி வரையிலான காலத்தில் 9 மாநிலங்கள்- யூனியன் பிரதேசங்களில் சராசரிக்கும் குறைவான மழைதான் பெய்திருக்கிறது. கேரளாவைப் பொறுத்தவரை சராசரியைவிட 22% குறைவாகும். டெல்லி, மணிப்பூர், மிசோரம், டையூ டாமனில் இது சரசாரியைவிட 50%க்கும் குறைவாகும்.

டெல்லி மழை நிலவரம்
தென்மேற்கு பருவமழை காலத்தில் டெல்லியில் ஜூலை 2-ல் 65.8 மி.மீ பெய்திருக்க வேண்டும். ஆனால் நடப்பாண்டில் 30.5 மி.மீ. மழைதான் பெய்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமைய்ன்று பல்வேறு மாநிலங்களில் சராசரியைவிட 13% கூடுதலாக மழை பெய்தது. பீகாரில் சரசாரியைவிட 66% பெய்திருக்கிறது. கடந்த ஆண்டு பீகார் வெள்ளத்தில் மிதந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அஸ்ஸாமில் வெள்ளம்
அதேநேரத்தில் அஸ்ஸாம், மேகாலயாவில் 24% மற்றும் 28% மழை பொழிவு இருந்தது. இதனால் அஸ்ஸாமில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அஸ்ஸாமில் வெள்ளத்தால் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 34 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டும் இதே காலகட்டத்தில் அஸ்ஸாம் வெள்ளப் பெருக்கை எதிர்கொண்டது.

கூடுதல் மழை பெய்த மாநிலங்கள்
சிக்கிம் மாநிலத்தில் சராசரியைக் காட்டிலும் 2 மடங்கு மழை கூடுதலாக பெய்திருக்கிறது. வழக்கமாக 457.5 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இம்முறை 107% அதாவது 945.5 மி.மீ மழை கொட்டி தீர்த்திருக்கிறது. மேகாலயா, உ.பி,, ம,பி, சத்தீஸ்கர், அந்தமான், ஆந்திரா, தெலுங்கானாவிலும் சராசரியை விட கூடுதல் மழை கொட்டியிருக்கிறது.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல












Click it and Unblock the Notifications