Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறப்பு பேருந்துகளில் அள்ளும் கூட்டம்.. பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளதால் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், சிறப்பு பேருந்துகள் மூலமாக கடந்த இரண்டு நாள்களில் 7,513 பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வேலை, கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வெளியூர் மற்றும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வந்து இங்கு வசித்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்வது வழக்கம்.

Pongal special bus

அந்த வகையில், வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்படுவதும் வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வகையில் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் வகையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணியாற்றி வருபவர்கள், கல்வி பயில்பவர்கள் என பலரும் சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கும் வகையிலும், எவ்வித சிரமமின்றியும் பயணிக்கும் வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் வழக்கமாக 2,092 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை 1,314 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் சுமார் 1.8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.

அதேபோல, ஜனவரி 11 ஆம் தேதியான சனிக்கிழமையும் 2,092 வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,015 சிறப்பு பேருந்துகள் என 4,107 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் 2.2 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 7,513 சிறப்புப் பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் விவரங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 94450 14436 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பான புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண் மற்றும் 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+