4 ஏடிஜிபிக்கள் அதிரடி இடமாற்றம்.. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அபய் குமார் சிங் நியமனம்!
சென்னை: தமிழ்நாட்டில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான 3 ஏடிஜிபிக்கள் இன்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு ஏடிஜிபிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அவ்வப்போது தமிழ்நாடு அரசு பணியிடமாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் இன்று 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்துள்ளது. அதோடு ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார். அதன்படி பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஏடிஜிபிக்களின் விபரம் வருமாறு:

* தமிழ்நாடு சிபிசிஐடி பிரிவு ஏடிஜிபியாக அபய் குமார் சிங் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அபய் குமார் சிங் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக பணியாற்றி வந்த கந்தசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில் இந்த பொறுப்பு காலியாக இருந்தது. இந்நிலையில் தான் அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மேலும் சென்னையில் தமிழ்நாடு போலீசின் தலைமையகத்தில் நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த வெங்கடராமன், சிபிசிஐடி பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* அதேபோல் சென்னையில் Operations ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த பால நாக தேவி, சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் தலையைகத்தின் நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் தலைமையகத்தின் ஏடிஜிபி பணியையும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.
* மேலும் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவர் ஆயுதப்படை ஏடிஜிபியாக செயல்படும் அதேவேளையில் கூடுதல் பொறுப்பாக ஆபரேஷன் பிரிவு ஏடிஜிபி பணியையும் கவனிக்க உள்ளார் என கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்











Click it and Unblock the Notifications