Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 ஏடிஜிபிக்கள் அதிரடி இடமாற்றம்.. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அபய் குமார் சிங் நியமனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான 3 ஏடிஜிபிக்கள் இன்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு ஏடிஜிபிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அவ்வப்போது தமிழ்நாடு அரசு பணியிடமாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் இன்று 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்துள்ளது. அதோடு ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார். அதன்படி பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஏடிஜிபிக்களின் விபரம் வருமாறு:

 4 ADGP Transaffered in Tamil nadu Abhay Kumar Singh appoints Vigilance and Anti Corruption Director

* தமிழ்நாடு சிபிசிஐடி பிரிவு ஏடிஜிபியாக அபய் குமார் சிங் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அபய் குமார் சிங் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக பணியாற்றி வந்த கந்தசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில் இந்த பொறுப்பு காலியாக இருந்தது. இந்நிலையில் தான் அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* மேலும் சென்னையில் தமிழ்நாடு போலீசின் தலைமையகத்தில் நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த வெங்கடராமன், சிபிசிஐடி பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* அதேபோல் சென்னையில் Operations ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த பால நாக தேவி, சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் தலையைகத்தின் நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் தலைமையகத்தின் ஏடிஜிபி பணியையும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.

* மேலும் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவர் ஆயுதப்படை ஏடிஜிபியாக செயல்படும் அதேவேளையில் கூடுதல் பொறுப்பாக ஆபரேஷன் பிரிவு ஏடிஜிபி பணியையும் கவனிக்க உள்ளார் என கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+