தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தல்... வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து திமுக சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

அதிமுக வேட்பாளர்கள்
நேற்று அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அதின் ஒருங்கிணைப்பாளர்கள் ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் அறிவித்தனர். இதன்படி நேற்றே விருப்ப மனு தாக்கல் மற்றும் நேர்காணல் நடந்தது. இன்று அல்லது நாளை அதிமுக வேட்பாளர்கள் யார் என்பதை அதிமுக தலைமை அறிவிக்கலாம்.

மநீம வேட்பாளர்கள்
இதேபோல் டிடிவி தினகரனின் அமமுக சார்பில் போட்டியிட உள்ளவர்களின் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கமலின் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளார்கள்.

வேட்பு மனு தாக்கல்
இந்நிலையில் அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வருகிற 29ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனு வாபஸ்
ஏப்ரல் 30ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை தொடங்கி மே 2ம் தேதி வரை நடக்கிறது. மே 2ம் தேதி மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் சுயேட்சைகளின் சின்னம் ஆகியவை அறிவிக்கப்பட உள்ளது. இதேபோல் மே 2ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம்.

மத்தியில் யார் ஆட்சி
மே 19ம் தேதி 4 தொகுதிகளில் தேர்தல் முடிந்த உடன் மே 23ம் தேதி வாக்குள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் 22 தொகுதிகளுக்கும், மே 23ம் தேதி முடிவு தெரிந்துவிடும். அதேபோல் மத்தியில் அடுத்து யார் ஆட்சி என்பதும் மே 23ம் தேதி முடிவுகள் வெளியாவதால் தெரிந்துவிடும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications