தமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு... நால்வர் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தமிழகத்தில் 482 பேருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 490 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறை அறிவித்துள்ளது.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: இன்று 482 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!

    தமிழகத்தில் இன்று புதிதாக 482 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தற்போது வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,53,449 ஆக உயர்ந்துள்ளது.

    4 died and 482 tested positive for Coronavirus today in Tamilnadu

    அதேபோல மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 490 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தற்போது மாநில முழுவதும் 3,978 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது.

    கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நான்கு பேர் இன்று உயிரிழந்தனர். அவர்களில் மூன்று பேர் சென்னையை சேர்ந்தவர்கள், மற்றொருவர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

    இன்று தலைநகர் சென்னையில் 189 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் 167 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்து கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முறையே 48 மற்றும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று மட்டும் 50,706 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 1,76,81,361 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+