ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்களுக்கு தொழில் செய்ய தடை - பார் கவுன்சில் அதிரடி
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 5ம் தேதி மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னையில் உள்ள வீட்டின் அருகேசிலருடன் பேசி கொண்டிருந்தபோது ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை வெட்டி கொன்றது.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷின் சகோதரர் சகோதரர பொன்னை பாலு உள்ளிட்ட அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸை சேர்ந்தவர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி மட்டும் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதனால் இந்த கொலை வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்இந்த வழக்கில் வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்களும் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹரிஹரன், அசுவத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோருக்கு 4 பேரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முடியும் வரை வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல் சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட ஐந்து வழக்கறிஞர்களுக்கும் தடை விதித்தும் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட செந்தில் நாதன், சக்தி வேல், விஜயகுமார், விமல் மற்றும் தினேஷ்குமார் ஆகிய 5 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வழக்கு ஒன்றில் தண்டனை விதிக்கப்பட்ட கோவிந்தராஜன் மற்றும் முகநூலில் ஆபாச கருத்து வெளியிட்ட மணியரசன் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications