Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கஜா புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்.. கடலோர காவல்படை கப்பல்கள் வருகை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கஜா புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்-வீடியோ

    சென்னை: கஜா புயலின் வருகையை தொடர்ந்து, அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையும் களத்தில் குதித்துள்ளது.

    மொத்தம் 10 தேசிய பேரிடர் படை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அதில் 3 குழுக்கள் நாகை மாவட்டத்திற்கும், 2 குழுக்கள், கடலூர் மாவட்டத்திற்கும் விரைந்துள்ளன.

    சென்னை, புதுச்சேரி மாவட்டங்களுக்கு தலா 1 குழு விரைந்துள்ளது. படகு உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் இவர்களிடம் உள்ளன.

    கஜா புயலை எதிர்கொள்ள சென்னை வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழுவில் 50பேர் தயார் நிலையில் உள்ளனர். மரங்களை அறுப்பது, கட்டிடங்களை உடைக்க கூடிய அதிநவீன கட்டர் உபகரணங்கள், படகுகள், தொலை தொடர்பு சாதனங்களுடன் இரு தினங்களுக்காக எந்த நேரத்தில் அழைப்பு வந்தாலும் செல்லும் வகையில் சென்னை அடையாறில் உள்ளனர்.

    4 Ships from coastal guard will monitor cyclone Gaja

    [வர்தா, தானே மாதிரி இல்ல 'கஜா'... கரையை கடக்கும் முன்னரே வலுவிழக்குமாம்! ]

    இந்திய கடலோர காவல்படையும், கஜா புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளது. 4 கடலோர காவல்படை கப்பல்கள் தமிழக, ஆந்திர கடலோர பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றன என்று, தென்மண்டல ஐஜி பரமேஷ் தெரிவித்தார்.

    அமைச்சர், வேலுமணி அளித்த பேட்டியொன்றில், கஜா புயலை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட புயல், மழை பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்படுவதாக தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+