சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் பனிமூட்டம்! ஸ்ரீபெரும்புதூர் அருகே 4 வாகனங்கள் மோதல்! 5 பேர் காயம்
சென்னை: சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகி 5 பேர் காயமடைந்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களாக மழை இல்லாவிட்டாலும் பனிமூட்டம் இருக்கிறது. பகல் பொழுதிலேயே குளிர் இருக்கிறது. இந்த நிலையில் புறநகர் பகுதிகள், காலி இடங்களில் பனிமூட்டமாக இருக்கிறது. இதனால் வாகனங்கள் முன்பகுதியில் உள்ள விளக்குகளை எறியவிட்டபடி வருகிறது.

அந்த வகையில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் மெதுவாகவும் முகப்பு விளக்குகளை எறியவிட்டபடியும் சென்றுக் கொண்டிருந்தன. அப்போது ஸ்ரீபெரும்புதூர் பென்னலூரில் சாலையை கடக்க முயன்ற குதிரை மீது கார் மோதியது.
இதையடுத்து 2 தொழிற்சாலைகளின் பேருந்து, காலி மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி என அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்டன. இதனால் 5 பேர் காயமடைந்தனர். கார் மோதியதில் குதிரை பலியாகிவிட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்றுடன் விடை பெற்றது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2 நாட்களாக தென்கிழக்கு தீபகற்பத்தில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இல்லை. வட இந்திய பகுதிகளில் வறண்ட காற்று வீசுகிறது.
இத்தகைய காரணங்களல் வடகிழக்கு பருவமழையானது கேரளம்- மாஹே, தெற்கு உள் கர்நாடகம், தமிழகம்- புதுவை- காரைக்கால், ராயல்சீமா, ஆந்திராவை ஒட்டிய கடலோர பகுதிகள் மற்றும் ஏனாம் பகுதிகளில் 27ஆம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடை பெற்றது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆங்காங்கே பனிப்பொழிவு இருக்கும் என சொல்லப்பட்டுள்ளதால் அதிகாலை வேளையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications