கோயம்பேட்டில் பாட்டியை பார்க்க சென்ற 4 வயது சிறுவன்! 6வது மாடி ஜன்னலில் இருந்து தவறி விழுந்த சோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6ஆவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக தவறி விழுந்த நான்கரை வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திநகர் அபிபுல்லா சாலை 3ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் திலீப் (38). இவரது மனைவி சுவாதி. இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். வேலூரில் இருந்து சுவாதியின் பெற்றோர் நேற்று சென்னை வந்திருந்தனர்.

chennai accident

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் விக்டோரியா அடுக்குமாடி குடியிருப்பில்தான் சுவாதியின் பெற்றோர் தங்கியிருந்தனர். அவர்களை பார்க்க சுவாதி மகன், மகளை அழைத்துச் சென்றார். அங்கு பெற்றோரிடம் சுவாதி பேசிக் கொண்டிருந்த போது சிறுவன் துருவன் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது திடீரென அலறல் சப்தம் கேட்டது. உடனே சுவாதி உள்ளிட்டோர் போய் ஜன்னல் வழியாக பார்த்த போது துருவன் கீழே விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்து ஓடி போய் பார்த்த போது சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். உடனே அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்: கடந்த பிப்ரவரி மாதம் தருமபுரி மாவட்டம் எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்த வினோத்குமார். இவரது மகன் ஆகாஷ் (6). இவர் இண்டூரில் உள்ள இவரது உறுவினர் வீட்டில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது கால் தவறி கீழே இரும்பு கேட்டில் விழுந்துள்ளார்.

அவரை மீட்டு தருமபுரி மருத்துவமனையில் சேர்த்த போது ஆகாஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இன்னொரு சம்பவம்: தாம்பரம் அருகே திருவஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்ரா. தம்பதியின் மகன் தீனா (6), வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குமார், வீட்டின் அருகிலுள்ள கடைக்கு புறப்பட்டுள்ளார். இதை, சிறுவன் தீனா முதல் மாடியிலிருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளான்.

அப்பாவுடனேயே செல்ல வேண்டி, சிறுவன் முயன்ற போது திடீரென முதல் மாடியிலிருந்து நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளான். இதனால் சப்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு எழும்பூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+