குறையும் கொரோனா... தமிழ்நாட்டில் இன்று 438 பேருக்கு மட்டுமே பாதிப்பு... 459 பேர் டிஸ்சார்ஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று மாநிலம் முழுவதும் 438 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: தொற்றிலிருந்து மீண்டு வருவோர் அதிகம்!

    கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று புதிதாக 438 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,47,823 ஆக உயர்ந்துள்ளது.

    438 people tested positive for Coronavirus in Tamilnadu, Six more deaths

    இது குறித்து தமிழ்நாடு சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று காரணமாக இன்று ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல சிகிச்சை பெற்று வந்தவர்களில் 459 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 4,120 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் இன்று மட்டும் 51,046 பேருக்கு கொரோனாவை கண்டறியும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் தற்போது வரை 1,70,70,597 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல சென்னையில் இன்று 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிகிச்சை பெற்று வந்தவர்களில் 145 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூன்று பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர்,

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+