சண்டே ஜாலியா வெளியே போறீங்களா? லோக்கல் ட்ரைன்ல போகாதீங்க.. 44 மின்சார ரயில்கள் ரத்து! முழு விவரம்
சென்னை: தண்டவாள பராமரிப்பு மற்றும் இன்ஜினியரிங் பணிகள் காரணமாக சென்னையில் இன்று 44 புறநகர் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு புறநகர் ரயில்களுக்கும் பங்கு இருக்கிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் இன்ஜினியரிங் பணிகள் காரணமாக 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 10.30, 10.40, 10.50, 11.00, 11.10, 11.20, 11:30, 11.40, 11.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்களும், மதியம் 12 மணி, 12.10, 12.20, 12.30, 12.50, 1.00, 1.15, 1.30, 1.45, 2.00, 2.15, 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 10.05 மணி தொடங்கி, 10:15, 10:25, 10:45, 10.55, 11.25, 11.35 ஆகிய நேரத்தில் இயக்கப்படும் ரயில்களும், மதியம் 12.00 மணி தொடங்கி, 12:15, 12.45, 1.30, 1.45, 2.15 ஆகிய நேரத்தில் இயக்கப்படும் ரயில்களும், மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 9.40, 10.55, 11.30, மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களும், காலை 9:30 மணிக்கு காஞ்சிபுரம்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயிலும், 11.05 மணிக்கு திருமால்பூர்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் என மொத்தம் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், பயணிகள் வசதிக்காக தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மதியம் 11:55, 12.45, 3.25, 3.45, 2:20, 2.25 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கமாக செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9:30, 9:40, 10.59, 11.05, 11.30 மதியம் 12.00, 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications