தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா... பல மாவட்டங்களில் ஒற்றை இலக்க பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் 143 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.
Recommended Video

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 495 பேர் குணமடைந்துள்ளனர்.. பல மாவட்டங்களில் ஒற்றை இலக்க பாதிப்புகளே உள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஆட்டம் காட்டி வந்தாலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. இதற்கு தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளே காரணம். நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். .இதன்படி, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 837 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 495 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரத்து 520 ஆக உயர்வடைந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,61,27,120 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 51,448 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 4,354 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்து செங்கல்பட்டில் 28 பாதிப்புகள் உள்ளன. இன்று தென்காசி மாவட்டத்த்தில் ஒரு பாதிப்பு கூட பாதிவாகவில்லை. பல மாவட்டங்களில் ஒற்றை இலக்க பாதிப்புகளே பதிவாயின.












Click it and Unblock the Notifications