Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்.. ஒரே நாளில் 47 தமிழக மீனவர்களை கைது செய்து அட்டூழியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மீனவர்கள் 47 பேரை நேற்று ஒரே நாளில் இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கைது செய்துள்ளது. தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்த 30 மீனவர்களை நேற்று இரவும், நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 17 தமிழக மீனவர்களை இன்று அதிகாலையிலும் கைது செய்தது இலங்கை கடற்படை.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. அடிக்கடி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது. தொடர்ந்து அத்துமீறலில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.

fishermen Sri Lankan Navy Dhanushkodi

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 47 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

நேற்று இரவு தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே 30 தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் அனைவரையும் கைது செய்தது. இதேபோல் இன்று அதிகாலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 17 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாம், காங்கேசன் கடற்படை முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒரே நாளில் 47 மீன்வர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+