தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்.. ஒரே நாளில் 47 தமிழக மீனவர்களை கைது செய்து அட்டூழியம்
சென்னை: தமிழக மீனவர்கள் 47 பேரை நேற்று ஒரே நாளில் இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கைது செய்துள்ளது. தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்த 30 மீனவர்களை நேற்று இரவும், நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 17 தமிழக மீனவர்களை இன்று அதிகாலையிலும் கைது செய்தது இலங்கை கடற்படை.
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. அடிக்கடி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது. தொடர்ந்து அத்துமீறலில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 47 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
நேற்று இரவு தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே 30 தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் அனைவரையும் கைது செய்தது. இதேபோல் இன்று அதிகாலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 17 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாம், காங்கேசன் கடற்படை முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒரே நாளில் 47 மீன்வர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications