தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா... தொடர்ந்து குறையும் உயிரிழப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 477 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. கொரோனாவுக்கு உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஆட்டம் காட்டி வந்தாலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் மேலும் 156 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 12,352 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர், சென்னையில் மட்டும் கொரோனா உயிரிழப்பு 4,114 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 503 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 8,24,527 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
இன்று 53,008 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,60,22,308 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 52,256 மாதிரி சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,63,34,713 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.