இந்தியாவில் வேகமாக உயரும் கொரோனா.. 20 நாளில் 48 சதவீதம் உயர்வு.. ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் பாதிப்பு
சென்னை: இந்தியாவில் கடந்த 20 நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு 48 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 37,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி 6.05 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு, ஜூலை 20-ஆம் தேதி அன்று 11.54 லட்சமாக உயர்ந்துவிட்டது.

அதாவது 20 நாட்களில் 48 சதவீதம் கொரோனா நோயாளிகள் இந்தியாவில் அதிகரித்துவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் 587 பேர் மரணமடைந்துள்ளார்கள்.
மொத்தமுள்ள 11.55 லட்சம் கேஸ்களில் 4.02 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 7.24 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை 28,084 பேர் மரணமடைந்துள்ளார்கள்.
ஜூலை 20-ஆம் தேதி வரை இதுவரை 1.43 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 3.33 லட்சம் பேர் நேற்று சோதனை செய்யப்பட்டனர். டெல்லியில் 954 புதிய கொரோனா கேஸ்களால் அங்கு மொத்த எண்ணிக்கை 1.23 லட்சமாக உயர்ந்தது.
டெல்லியில் புதிய கேஸ்கள் 3 இலக்கங்களில் வருவது இதுவே முதல்முறையாகும். பொதுவாக இங்கு புதிய கேஸ்கள் 1000 முதல் 2000 வரை இருக்கும். தேசிய அளவில் சமூக பரவலுக்கான ஆதாரம் ஏதும் இல்லை.
குஜராத்தில் உள்ள அகமதாபாத், மும்பையின் மத்திய பகுதிகளிலும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications