Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NEET: 2 முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கவுன்சிலிங்கில் அதிக வாய்ப்பு! வெளியான டேட்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வை 2 முறைக்கு மேல் எழுதியவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசையில், 2 முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதிய 48,954 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முதல் முறையாக நீட் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 23,240 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 5 முறைக்கு மேல் நீட் எழுதியவர்கள் 573 பேர் தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர்.

48954 Repeat NEET Candidates Get Chance in MBBS BDS Counseling

கவுன்சிலிங் - தரவரிசை

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் உள்ள 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 11,063 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில், 2025 - 26 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கு, 72,473 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், போலி ஆவணங்கள் சமர்ப்பித்த, 25 பேர் கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீடு, சிறப்பு ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என்ற அடிப்படையில் தகுதி பெற்ற, 72,194 மாணவர்களின் தரவரிசை பட்டியலை, சென்னையில் நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.

தரவரிசை டாப் லிஸ்ட்

அரசு ஒதுக்கீட்டில் நீட் தேர்வில், 665 மதிப்பெண் பெற்ற திருநெல்வேலியை சேர்ந்த சூர்யநாராயணன் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல, நீட் தேர்வில் 655 மதிப்பெண் பெற்ற சேலத்தை சேர்ந்த அபினீத் நாகராஜ், 653 மதிப்பெண் பெற்ற திருப்பூரை சேர்ந்த ஹிருத்திக் விஜயராஜா ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். இதில், முதல் 10 இடங்களில், ஒன்பது இடங்களை மாணவர்களே பிடித்துள்ளனர்.

7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில், நீட் தேர்வில் 572 மதிப்பெண் பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த திருமூர்த்தி; 563 மதிப்பெண் பெற்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த சதீஷ்குமார், 551 மதிப்பெண் பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த மதுமிதா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

2 முறைக்கு மேல் எழுதியவர்கள்

மேலும், கடந்த ஆண்டுகளில், நீட் தேர்வு எழுதி மதிப்பெண் குறைவால் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் இடம் கிடைக்காமல் போனவர்கள், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதினர். அதன்படி, இரு முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதிய, 48,954 மாணவர்கள் இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

முதல் முறையாக தேர்வு எழுதியவர்களில் 7.5% உள் ஒதுக்கீட்டு இடங்கள் உள்பட மொத்தம் 23,240 பேருக்கு தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2 முறை தேர்வு எழுதியவர்களில் 27,825 பேர், மூன்று முறை தேர்வு எழுதியவர்களில் 14,636 பேர், 4 முறை நீட் தேர்வு எழுதியவர்களில் 4,715 பேர் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 5 முறைக்கு மேல் நீட் எழுதியவர்கள் 573 பேர் தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் படித்து தேர்வானவர்களிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற நீட் தேர்வை 2, 3 முறைகள் எழுத வேண்டியுள்ளது. நீட் என்பது ஏழை மாணவர்களுக்கான தடை என்பது நிரூபணம் ஆகியுள்ளது என சமூக வலைதளங்களில் கருத்துகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+