சென்னையில் 5 கோடி சொத்து . மருமகளுக்கு விபூதி அடித்த மாமனார்.. விஷயமே வேற!
சென்னை: மகனுக்கு திருமணமாகவில்லை என போலி சான்று தயாரித்திருக்கிறார் அப்பா. அதன் மூலம் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த நிலையில், மருமகள் இதுகுறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாமனாரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நில அபகரிப்பு புகார்கள் சென்னையில் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக வருகிறது. வித்தியாசமான முறையில் மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். ஆதார் கார்டு வேண்டும். நேரில் வர வேண்டும்.கையெழுத்து அல்லது கைரேகை வைக்க வேண்டும், விதவை சான்றிதழ் வேண்டும், வாரிசு சான்றிதழ் வேண்டும் என பல கட்டுப்பாடுகள் பத்திரங்கள் பதிவதற்கு இருக்கிறது. அதையும் மீறி மோசடிகள் அரங்கேறி வருகிறது. அப்படி மோசடியை உறவினர்களே சிலர் நேரம் மேற்கொள்கிறார்கள். அப்படி ஒரு மோசடி குறித்து தான் பார்க்க போகிறோம்.

சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த பெண் பாரதி. இவருக்கு 45 வயதாகிறது. பாரதி அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று நில அபகரிப்பு புகார் ஒன்றை அளித்தார்.
5கோடி மதிப்புள்ள நிலம்: அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது: என் பெயர் பாரதி, எனக்கு 45 வயது ஆகிறது. என்னுடைய கணவர் விஜயகுமார். என் கணவர் 2007-ல் நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் என் கணவர் விஜயகுமார் பெயரில் சென்னை பெரவள்ளூரில் ரூ.5 கோடி மதிப்பில் நிலத்துடன் கூடிய வீடு இருக்கிறது.
வாரிசு சான்றிதழ்: இந்நிலையில், எனது மாமனாரும் விஜயகுமாரின் தந்தையுமான செங்கோடன் (வயது 71) மாதவரத்தில் வசிக்கிறார். என் கணவர் விஜயகுமார் இறந்து போன நிலையில், அவரது பெயரில் உள்ள சொத்தை மோசடி செய்து அபகரிக்க முடிவு செய்தார். இதற்காக விஜயகுமாருக்கு திருமணம் ஆனதை மறைந்து, அதாவது திருமணம் ஆகவில்லை என்று கூறி, போலியான வாரிசு சான்றிதழ் தயாரித்து, போலியான ஆவணங்கள் பதிவு செய்து, 5 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து ஆதாயம் அடைந்துள்ளார். எனவே, அவர் மீதும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகாரில் கூறியிருந்தார்.
மாமனார் கைது: இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, நில மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், பாரதி அவரது மாமனார் குறித்து தெரிவித்திருந்த புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, பாரதியின் மாமனார் செங்கோடன், அவரது கூட்டாளி கானாத்தூர் லோகநாதன் (51) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தார்கள். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications