Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் 5 கோடி சொத்து . மருமகளுக்கு விபூதி அடித்த மாமனார்.. விஷயமே வேற!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகனுக்கு திருமணமாகவில்லை என போலி சான்று தயாரித்திருக்கிறார் அப்பா. அதன் மூலம் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த நிலையில், மருமகள் இதுகுறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாமனாரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நில அபகரிப்பு புகார்கள் சென்னையில் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக வருகிறது. வித்தியாசமான முறையில் மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். ஆதார் கார்டு வேண்டும். நேரில் வர வேண்டும்.கையெழுத்து அல்லது கைரேகை வைக்க வேண்டும், விதவை சான்றிதழ் வேண்டும், வாரிசு சான்றிதழ் வேண்டும் என பல கட்டுப்பாடுகள் பத்திரங்கள் பதிவதற்கு இருக்கிறது. அதையும் மீறி மோசடிகள் அரங்கேறி வருகிறது. அப்படி மோசடியை உறவினர்களே சிலர் நேரம் மேற்கொள்கிறார்கள். அப்படி ஒரு மோசடி குறித்து தான் பார்க்க போகிறோம்.

5 crore property in Chennai: Father-in-law arrested for cheating daughter-in-law

சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த பெண் பாரதி. இவருக்கு 45 வயதாகிறது. பாரதி அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று நில அபகரிப்பு புகார் ஒன்றை அளித்தார்.

5கோடி மதிப்புள்ள நிலம்: அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது: என் பெயர் பாரதி, எனக்கு 45 வயது ஆகிறது. என்னுடைய கணவர் விஜயகுமார். என் கணவர் 2007-ல் நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் என் கணவர் விஜயகுமார் பெயரில் சென்னை பெரவள்ளூரில் ரூ.5 கோடி மதிப்பில் நிலத்துடன் கூடிய வீடு இருக்கிறது.

வாரிசு சான்றிதழ்: இந்நிலையில், எனது மாமனாரும் விஜயகுமாரின் தந்தையுமான செங்கோடன் (வயது 71) மாதவரத்தில் வசிக்கிறார். என் கணவர் விஜயகுமார் இறந்து போன நிலையில், அவரது பெயரில் உள்ள சொத்தை மோசடி செய்து அபகரிக்க முடிவு செய்தார். இதற்காக விஜயகுமாருக்கு திருமணம் ஆனதை மறைந்து, அதாவது திருமணம் ஆகவில்லை என்று கூறி, போலியான வாரிசு சான்றிதழ் தயாரித்து, போலியான ஆவணங்கள் பதிவு செய்து, 5 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து ஆதாயம் அடைந்துள்ளார். எனவே, அவர் மீதும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகாரில் கூறியிருந்தார்.

மாமனார் கைது: இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, நில மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், பாரதி அவரது மாமனார் குறித்து தெரிவித்திருந்த புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, பாரதியின் மாமனார் செங்கோடன், அவரது கூட்டாளி கானாத்தூர் லோகநாதன் (51) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தார்கள். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+