சென்னையின் பசுமை போச்சே.. விழுந்த 694 மரங்கள்! 5 பேர் பலி -புயல் சேதம் எவ்வளவு? அமைச்சர்கள் விளக்கம்
சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக 5 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 694 மரங்கள் சாய்ந்ததாகவும் தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தை அடுத்த கடலோர பகுதியில் நள்ளிரவு பலத்த மழை மற்றும் அதிவேக காற்றுடன் கரையைக் கடந்தது.
இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கைக்காக மாநகரம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கரையை கடந்த புயல்
புயல் கரையை கடந்தபோது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கி.மீ. வரை பலத்த காற்றும் வீசியது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் அது முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

5 பேர் உயிரிழப்பு
இந்த நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், "மாண்டஸ் புயல் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

694 மரங்கள்
மாண்டஸ் புயலால் உயிரிழந்தவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 3 பேர். 40 இயந்திர படகுகள் மற்றும் 160 வலைகள் மாண்டஸ் புயலின் காரணமாக சேதமடைந்து இருக்கின்றன. புயல் காற்று வீசியதன் காரணமாக மொத்தம் 694 மரங்கள் சாய்ந்து உள்ளன. இதுவரை 10,743 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்." என்றார்.

வனத்துறை அமைச்சர்
இதேபோல் இன்று சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கனமழை மற்றும் மாண்டஸ் புயலின் காரணமாக விலங்குகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

வண்டலூர் பூங்கா
இந்த பூங்காவில் மாண்டஸ் புயலின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததாக தகவல் கிடைத்தது. உடனே இங்கு வந்து ஆய்வு செய்தேன். அதில் 7 பெரிய மரங்களும், ஏராளமான சிறிய மரங்களும் கீழே விழுந்து உள்ளன. அதேபோல் பூங்காவிற்கு உள்ளே இருக்கும் அலுவலகம் அருகே உள்ள மதில் சுவர் சேதமடைந்து இருக்கிறது. அதை சீரமைக்க உத்தரவிட்டுள்ளோம்.

மீட்புப்பணி
கீழே விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி தூய்மை செய்வதாக பூங்கா இயக்குநர் தெரிவித்து இருக்கிறார். அனைத்து அதிகாரிகளும் இங்கு உள்ளதால் பராமரிப்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. மிருங்கள் மற்றும் அவை தங்கி இருந்த கூண்டுகளுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை." என்றார்.

துரிதப்பணி
அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications