எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு 10க்கு 5 மார்க் 13.06%, 1மார்க் 10.01% பேர்: புதிய தலைமுறை சர்வே
சென்னை: புதிய தலைமுறை கருத்துக்கணிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 10க்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்களை 13.06 சதவீதம் பேர் அளித்துள்ளனர்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள், கூட்டணிகள் குறித்து மக்கள் கருத்து, அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கருத்து, எதிர்க்கட்சியின் வாக்குறுதிகள் குறித்த மக்கள் கருத்து என பல்வேறு கேள்விகளை முன்வைத்து கருத்துக்கணிப்புகளை நடத்தி உள்ளது.
அப்படி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள் அளிப்பீர்கள் என்று கேள்வி கேட்டது.
ஒருமதிப்பெண்கள்
இந்த கேள்விக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 10க்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் அளிப்போம் என அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். 2வது பட்சமாக 10க்கு ஒரு மதிப்பெண் என 10.01 சதவீதம் பேர் கொடுத்துள்ளனர். 3வது பட்சமாக 9.59 சதவீதம் பேர் 8 மதிப்பெண் கொடுத்துள்ளனர். 7 மதிப்பெண்களை 8.92 சதவீதம் பேர் கொடுத்துள்ளனர்.
2 மதிப்பெண்கள்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 10க்கு 10 மதிப்பெண்களை 7.39 சதவீதம் பேர் கொடுத்துள்ளனர். 4 மதிப்பெண்களை 7.50 சதவீதம் பேரும், 3 மதிப்பெண்களை 7.06 சதவீதம் பேரும். 2 மதிப்பெண்களை 6.74 சதவீதம் பேரும் அளித்துள்ளனர்.
கருத்து இல்லை
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 10க்கு 6 மதிப்பெண்களை 6.13 சதவீதம் பேரும், 10க்கு பூஜ்யம் மதிப்பெண்களை 4.91 சதவீதம் பேரும் அளித்துளளனர். கருத்து சொல்ல இயலாது என்று 13.85 சதவீதம் பேர் கொடுத்துள்ளனர்.
5 சதவீதத்திற்கு கீழ் அதிகம்
அதேநேரம் இந்த கருத்துக்கணிப்புகளை பார்க்கும் போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 10க்கு 5 மதிப்பெண் அல்லது ஐந்து மதிப்பெண்ணுக்கு கீழ் 57 சதவீதம் பேர் கொடுத்துள்ளனர். இதேபோல் 5 முதல் 10 மதிப்பெண்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 36 சதவீதம் பேர் கொடுத்திருப்பது தெரிகிறது.