ஈஷா யோகா மையத்தில் மாயமான 6 பேரில் 5 பேர் திரும்பிவிட்டனர்.. ஐகோர்ட்டில் காவல் துறை பதில்
சென்னை: ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி இதுவரை காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பி விட்டனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் என்பது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு சிவராத்திரி உள்ளிட்ட நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. இந்த ஈஷா மையத்தில் சேவை புரிய வெளிநாட்டினர், வெளி மாநிலத்தவர்கள், தமிழகத்தை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் வருகிறார்கள்.

இங்கு அவர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் குலசேகரன்பட்டியை சேர்ந்த விவசாயி திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2007ஆம் ஆண்டு கோவை ஈஷா யோகா மையத்தில் எனது சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் தன்னார்வலராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து என்னை தொலைபேசியில் சிலர் அழைத்தனர்.
அப்போது கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா என கேட்டனர். மேலும் ஈஷா யோகா மையத்திற்கு அவர் 3 நாட்களாக வரவில்லை என தெரிவித்திருந்தனர். இது குறித்து ஈஷோ யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஓராண்டாக வழக்கு விசாரணை வேகம் எடுக்காமல் இருந்து வருகிறது.
எனவே போலீஸ் விசாரணையைத் துரிதப்படுத்தி காணாமல் போன என் சகோதரர் கணேசனை மீட்டுத் தர வேண்டும். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், 'கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில், இதுவரை 6 பேர் காணாமல் போய் உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்று கூறினார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இதுவரை 36 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஈஷா யோகா மைய ஊழியர்கள், தன்னார்வலர்களிடம் விசாரணை நடந்துள்ளது. ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டனர் என தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
ஒட்டுமொத்த ஊரே பார்க்க..பஸ் ஸ்டாண்டில் கணவன் செய்த செயல்! ஒரே நிமிடத்தில் எல்லாமே முடிஞ்சது! ஷாக் ! -
IPS Transfer: உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்.. 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு! -
விருதுநகரில் உல்லாசமாக இருந்த பெண்ணிடமே ரூ.80 லட்சம்.. சமார்த்திய போலீஸ் ஏட்டுக்கு ட்விஸ்ட் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம்












Click it and Unblock the Notifications