Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் கட்சிகள் திக் திக்.. 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை ரிலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நடந்து முடியும் நிலையில் மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளதை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் அதை எதிர்பார்த்து காத்து உள்ளார்கள்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கும், மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா மூலமாக பாஜக செய்த ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

5 state election exit poll to be released today evening

மிசோரம் மாநிலத்தில் சொராம்தங்காவின் எம்.என்.எப் கட்சியும், தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ் (பி.ஆர்.எஸ்) கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியமைத்தனர். இந்த 5 மாநிலங்களில் ஆளும் அரசுகளின் ஆட்சி காலம் இந்த ஆண்டுடன் நிறைவடையும் நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

"மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 ஆம் தேதி மற்றும் 17 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் நடக்கும். தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 3 ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்." என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு சுமுகமாக நடந்து முடிந்து இருக்கின்றன. இறுதியாக இன்று தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு இன்று மாலை நிறைவடையும். ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கு பின்பும் கருத்துக்கணிப்புகள் ஊடகங்களில் வெளியிடப்படும்.

குறிப்பாக தேர்தலில் வாக்களித்துவிட்டு வரும் மக்களிடம் கருத்துக்களை பெற்று வெளியிடப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அரசியல் கட்சிகளாலும், பொதுமக்களாலும் உன்னிப்பாக நோக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு ஊடகங்கள், கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எடுத்து வைத்து உள்ளது. இன்று தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கும் கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று தெலுங்கானாவில் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்த பிறகு அனைத்து ஊடகங்களும், அமைப்புகளும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட உள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை காட்டிலும், பிந்தைய கருத்துக்கணிப்புகளில் துல்லியம் அதிகம் இருக்கும் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை நமது ஒன் இந்தியா தமிழும் உடனுக்குடன் வெளியிட இருக்கிறது. ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் லைவ் பக்கம் மற்றும் செய்திகள் மூலமாக இவற்றை நீங்கள் அறியலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+