50 புதிய ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள்! நீண்ட தூர பயணிகளுக்கு இந்திய ரயில்வே தரும் மெகா சர்ப்ரைஸ்
சென்னை: ரயில்வே துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய வந்தே பாரத் ரயில்கள், விமானங்களுக்கு இணையான அதிநவீன வசதிகளுடன் இந்திய மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்தகைய சூழலில், பகல் நேர இருக்கை வசதி கொண்ட ரயில்களின் தேவை முழுமையாகப் பூர்த்தியானதைத் தொடர்ந்து, சென்னை ஐ.சி.எப் ஆலையில் அதன் தயாரிப்புப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன. இந்த மைல்கல்லைத் தொடர்ந்து, பொதுமக்களின் நீண்ட தூரப் பயணங்களை எளிதாக்க 50 புதிய ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்க ரயில்வே வாரியம் தற்போது புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்திய ரயில்வே துறையில் மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய பெருமை வந்தே பாரத் ரயில்களையே சேரும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன ரயில்கள், இந்தியாவின் பொதுப்போக்குவரத்து முகப்பையே முழுமையாக மாற்றியமைத்துள்ளன.

வந்தே பாரத் வசதிகள் - சர்ப்ரைஸ்
விமானங்களுக்கு இணையான சொகுசு வசதிகள், அதிவேகப் பயணம், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால், இந்திய மக்களிடையே இந்த ரயில்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
முக்கியமாக தானியங்கி கதவுகள், சுழலும் இருக்கைகள், ஜி.பி.எஸ் அடிப்படையிலான பயணத் தகவல் அமைப்புகள் மற்றும் நவீன சிசிடிவி கேமராக்கள் போன்ற வசதிகள் நடுத்தர மற்றும் உயர் பிரிவு பயணிகளை பெருமளவில் ஈர்த்துள்ளன. வார இறுதி நாட்களிலும், பண்டிகைக் காலங்களிலும் இந்த ரயில்களில் டிக்கெட் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் அளவிற்கு இதன் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஐசிஎப் புதிய மைல்கல்
இத்தகைய சூழலில், ஒட்டுமொத்த இந்திய ரயில்வேத்துறையையும், பயணிகளையும் உற்றுநோக்க வைக்கும் ஒரு முக்கிய மைல்கல் செய்தி தற்போது சென்னை பெரம்பூர் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையான ஐ.சி.எப் (ICF) வளாகத்தில் இருந்து வெளியாகியுள்ளது.
இதுவரை நாம் பார்த்து ரசித்த, பகல் நேரங்களில் மட்டுமே இயக்கப்படக்கூடிய இருக்கை வசதி (Sitter) கொண்ட வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்புப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன. இந்தத் திட்டத்தின் இறுதி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 97வது வந்தே பாரத் ரயிலின் தயாரிப்புப் பணிகள் ஐ.சி.எப் ஆலையில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, அது இப்போது முழுமையான வடிவத்தைப் பெற்றுள்ளது.
97 புதிய ரயில்கள்
இறுதி கட்ட சோதனைகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த 97வது வந்தே பாரத் ரயில் மிக விரைவில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "இந்திய மக்களிடையே இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. இருக்கை வசதி மட்டுமே கொண்ட 97 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க வேண்டும் என்று எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
ஊழியர்களின் அயராத உழைப்பால் தற்போது அந்த இலக்கை நாங்கள் முழுமையாக எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளோம். இந்த இறுதி ரயிலை இன்னும் சில தினங்களில் ரயில்வே வாரியத்திடம் முறைப்படி ஒப்படைக்க உள்ளோம்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.
மேலும், தற்போதைய நிலவரப்படி பகல் நேர இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களுக்கான தேவை இந்திய அளவில் முழுமையாகப் பூர்த்தியாகிவிட்டதாக ரயில்வே துறை கருதுகிறது.
படுக்கை வசதி கொண்ட 'ஸ்லீப்பர்' வந்தே பாரத் ரயில்கள்
இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, இனி வரும் மாதங்களில் சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலை தனது அடுத்த பிரம்மாண்டமான இலக்கை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
அதன்படி, இனிமேல் இருக்கை வசதி கொண்ட ரயில்களுக்குப் பதிலாக, பொதுமக்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் (Sleeper) வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இப்போதைய நீண்ட தூர இரவு நேர விரைவு ரயில்களுக்கு மாற்றாக, அதிநவீன சொகுசு வசதிகளுடன் கூடிய இந்த புதிய ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை இயக்க விரிவான வரைபடங்கள் தயாராகி வருகின்றன.
அடுத்த ஆண்டு இறுதிக்குள், அதாவது 2027ஆம் ஆண்டின் இறுதி காலகட்டத்திற்குள், மொத்தம் 50 அதிநவீன ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரித்து முடிக்க புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் இந்திய ரயில்வே வரலாற்றில் இரவு நேரப் பயணங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது...!!
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications