கிராமங்களில் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர்.. பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. . நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

55 லிட்டர் தரமான குடிநீர்
ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுளள்து. குறிப்பாக குக்கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது 79,395 குக்கிராமங்களில் ஒருநபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சூப்பர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1.27 கோடி குடும்பம்
மொத்தம் 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும் என்று நிதி அமைச்சர் கூறி இருக்கிறார். தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் இன்னும் தரமான குடிநீர் கிடைக்காத நிலையில் ஒருநபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்கப்படும் என்று கூறி இருபப்து மிகவும் சிறப்பான திட்டமாகும்.

தூய்மை பாரத இயக்கம்
மேலும் கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுளள்து. ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள்
ரூ.610 கோடி செலவில் நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications