வேகமாக குறையும் தொற்று.. பெருகும் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 690 பேர் பாதிப்பு
சென்னையில் இன்று 690 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 690 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 723ஆக இருந்த தொற்று எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே தொற்று வேகமாக குறைந்து வருகிறது... அதேபோல டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகிறது.. இதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிதான் காரணம்..
இனி வரும் காலங்களில் இந்த தொற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது குறைவாகவே பாதிப்பு கண்டறியப்பட்டு வருவது ஆறுதலை தந்து வருகிறது.
தமிழகத்தில் மேலும் 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,24,522 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,91,236 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 3,848 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல, தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 11,122 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா தொற்று.. மொத்த பாதிப்பு 7,24,522 ஆக உயர்வு..!
மாவட்ட வாரியாக சென்னையில் வழக்கம்போல் அதிக பாதிப்பு காணப்படுகிறது.. சென்னையில் இன்று ஒரே நாளில் 690 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 199916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூரில் 214 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. சேலத்தில் 145 பேரும் திருவள்ளூரில் 133 பேரும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. . இதில் சென்னைக்கு அடுத்து கோவையில்தான் அதிக பாதிப்பு உள்ளது.. மற்ற மாவட்டங்களில் இரட்டை இலக்கத்திலேயே பாதிப்படைந்தோர் எண்ணிக்கை உள்ளது.