சென்னையில் 4375 ஏக்கரில் 6வது நீர்தேக்கம்.. ஓஎம்ஆர் டூ ஈசிஆரில் பிரம்மாண்டம்.. டெண்டர் வெளியீடு
சென்னை: சென்னை கோவளத்தில் ரூ.471 கோடியில் புதிதாக அமைக்கப்பட உள்ள 6-வது நீர்த்தேக்க திட்டத்தின் முதல் கட்டப்பணிக்கு நீர்வளத்துறை டெண்டர் கோரி உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு இடையே திருப்போரூர் அருகே அரசு நிலத்தில் சுமார் 4 ஆயிரத்து 375 ஏக்கர் நிலத்தில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஏரி அமைந்தால் தென் சென்னையின் குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்.
சென்னை மாநகரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நீர் தேவையை பூர்த்தி செய்ய, நீர் தேக்கங்களை அமைக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஏரிகள்
தற்போதைய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஆகிய ஐந்து குடிநீர் தேக்கங்கள் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஐந்தும் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ளது. இதுதவிர கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், தெலுங்கு கால்வாய் திட்டம் மூலம் கிருஷ்ணா நதி மூலம் குடிநீர் சென்னைக்கு கிடைக்கிறது. ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீரை பூண்டி ஏரிக்கு கொண்டு வரப்படுகிறது.
தென்சென்னையின் குடிநீர்
அங்கிருந்து கிருஷ்ணா நதி நீர் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தேவைப்படும்போது கால்வாய் மூலம் திறந்து விடுகிறது. இதற்கு என்று தனியாக கால்வாய்களும் உள்ளன. இந்த நீர்தேக்கங்கள் ஒரு புறம் எனில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டம் மூலமும் பல லட்சம் வீடுகளுக்கு தென் சென்னையில் குடிநீர் வழங்கப்படுகிறது.
கோவளம் அருகே 4375 ஏக்கரில் 6-வது நீர்த்தேக்கம்
எனினும் தற்போதைய நிலையில் தென்சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அவர்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, சென்னையில் ஆறாவதாக புதிய நீர் தேக்கம் திருப்போரூர் மற்றும் கோவளம் இடையே 4375 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கிறது. சுமார் ரூ.471 கோடியில் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான பணிகளிலும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
புதிய நீர் தேக்கம்
நீர்வளத்துறை வெளியிட்ட தகவலின்படி, திருப்போரூர் முதல் கோவளம் இடையே 4 ஆயிரத்து 375 ஏக்கர் அரசு நிலத்தில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. 1.6 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட இந்த புதிய நீர்த்தேக்கம் சுமார் ரூ.471 கோடி மதிப்பில் கட்டப்படப்பட உள்ளது. இந்த ர்த்தேக்கம் அமைக்கும் பணியில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். கோவளம் பகுதியில் உள்ள தமிழக அரசின் உப்பு கழக நிறுவனத்திற்கு சொந்தமாக அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்க, தமிழக நீர்வளத்துறை ரூ.32 கோடிக்கு டெண்டர் கோரி இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த 3 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் கூறினார்கள்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications