தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:தமிழகத்தில் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 7 பேரை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் மிகப் பெரிய அளவில் ஐபிஎஸ் மாற்றம் வர வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவும், அவர்கள் முன்பு வகித்த பதவியும் தற்போது மாற்றப்பட்டுள்ள பதவியும் விபரம் வருமாறு.

1. கல்விப் பயில விடுப்பில் சென்றிருந்த ஐஜி அபின் தினேஷ் மொடக் மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி கல்பனா நாயக் இடமாற்றம் செய்யப்பட்டு, ரயில்வே ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. ராணிப்பேட்டை எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் மாற்றப்பட்டு மதுரை 6- வது பட்டாலியன் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சென்னை ரயில்வே எஸ்.பி, தீபா சத்யன் மாற்றப்பட்டு ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. மதுரை 6-வது பட்டலியன் கமாண்டன்ட் இளங்கோ மாற்றப்பட்டு சென்னை ரயில்வே எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. கடலோர காவல் குழுமம், ராமநாதபுரம் எஸ்.பி, ஜெயந்தி மாற்றப்பட்டு சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
7.சேலம் மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி, மகேஷ்குமார் மாற்றப்பட்டு நில அபகரிப்பு தடுப்பு- சிறப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த இடமாறுதல் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications