பிளாஸ்டிக் கவருக்குள் 7 மாத சிசு.. அதிர்ச்சியில் உறைந்த சிவக்கொழுந்து.. சென்னையில் கொடுமை
Recommended Video

சென்னை: குப்பை தொட்டியில் 7 மாத ஆண் சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சென்னை பேசின்பாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேசின் பாலம் பகுதியில் இன்று வழக்கம்போல குப்பைகளை அகற்றி தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார் சிவக்கொழுந்து (பெண்). சிவராஜபுரம் 4 வது தெருவில் அவர் தனது பணிகளை செய்து கொண்டிருந்தபோதுதான், அந்த அதிர்ச்சி காட்சியை அவர் பார்த்தார்.

குப்பை அள்ளும் பிளாஸ்டிக் கவரில் ஒரு பார்சல் இருந்துள்ளது. அதை குப்பை என்று நினைத்து குப்பைகளுடன் குப்பையாக அள்ளிக் கொண்டு, தான் வந்த மூன்று சக்கர மிதி வண்டியில் வைத்து கொண்டு சென்றுள்ளார்.
பேசின் பாலம் குப்பை கிடங்குக்கு சைக்கிளை மிதித்து சென்ற பிறகு, குப்பை கிடங்கில் குப்பையை கொட்டுவதற்காக பிளாஸ்டிக் கவரை திறந்து பார்த்துள்ளார்.
ஆனால், அந்த பைக்குள், 7 மாதமேயான சிசு ஒன்று இறந்த நிலையில் இருப்பதை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மேற்பார்வையாளர் தினகரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து முறைப்படி, பேசின்பாலம் காவல் நிலையத்திற்கு தகவல் கூறப்பட்டது. பின்பு சம்பவ இடத்திற்கு வந்த பேசின் பாலம் காவல் ஆய்வாளர் ராமசாமி சிசுவின் உடலை கைப்பற்றி ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications