தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா... சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.சென்னையில் 294 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,59,726 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 12,547 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை விமான நிலையம்.. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர்.. முதல்வரின் 'க்ளெவர்' ஸ்டிராடஜி!
சென்னையில் 294 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மேலும் 65,087 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,79,66,115 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 67,269 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 1,82,84,550 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 63 பாதிப்புகள் பதிவாகின. கோயம்புத்தூரில் 58 பாதிப்புகளும், தஞ்சாவூரில் 44 பாதிப்புகளும், திருவள்ளூரில் 42, காஞ்சிபுரத்தில் 24 பாதிப்புகளும் பதிவாகின.