இலங்கையின் கொடூரம்.. 40 நாட்களில் 77 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு- லோக்சபாவில் கொந்தளித்த டிஆர் பாலு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை கடற்படையால் கடந்த 40 நாட்களில் மட்டும் 77 தமிழ்நாட்டு மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்; தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் கைது விவகாரத்தில் மத்திய அரசால் தீர்வு காண முடியாத நிலையில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்களே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று லோக்சபாவில் திமுகவின் டிஆர் பாலு எம்பி வலியுறுத்தினார்.

லோக்சபாவில் டிஆர் பாலு எம்பி பேசியதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மீனவர்களின் துயர நிலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். உண்மையில், கடந்த 2024 ஆம் ஆண்டில், 528க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு, 40 நாட்களுக்குள், 77க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இலங்கை கடற்படையின் மீனவர்களை துன்புறுத்தி, அவர்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு, அவர்களைக் காவலில் வைத்தது.

srilanka india fishermen dmk

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மீனவர்களின் துயர நிலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். உண்மையில், கடந்த 2024 ஆம் ஆண்டில், 528க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு, 40 நாட்களுக்குள், 77க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இலங்கை கடற்படையின் மீனவர்களை துன்புறுத்தி, அவர்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு, அவர்களைக் காவலில் வைத்தது.

மத்திய அரசால் இனி மீனவர்களை காக்க இயலவில்லை என்றால், இருநாட்டு மீனவர்களும் அவர்கள் பிரச்சினைக்கு அவர்களே தீர்வு காணட்டும். ஆகையால் மீனவர்கள் கைது விவகாரத்துக்கு நிரந்தரமான தீர்வை உருவாக்க வேண்டும். இவ்வாறு டிஆர் பாலு பேசினார்.

தமிழக நிதியை விடுவிக்க வேண்டும்- கனிமொழி

லோக்சபாவில் பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி,
தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள சமக்ர சிக்‌ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித் தொகைகளுக்கான வருமான உச்சவரம்பை EWS மாணவர்களை போலவே எட்டு லட்சமாக உயர்த்துவதன் மூலம் விளிம்புநிலை சமூக மக்கள் அதிக அளவில் கல்வி பயில இயலும் என்பதால் மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதை விவாதிக்க வேண்டும் என்றார்.

யுஜிசிக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு

லோக்சபாவில் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், யுஜிசி முன்மொழிந்த வரைவு விதிமுறைகள், மாநில பல்கலைக்கழகங்களின் சுயாட்சியை குறைமதிப்புக்கு உட்படுத்துகின்றன. இது கூட்டாட்சி கட்டமைப்புக்கு பெரிய சவாலை ஏற்படுத்துகிறது. இந்த விதிமுறைகள் துணைவேந்தர் தேடல் குழுக்களில் பல்கலைக்கழக மானியக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பிரதிநிதியை கட்டாயப்படுத்துவதன் மூலமும், மாநில ஆளுநர்களுக்கு ஒருதலைப்பட்ச அதிகாரங்களை வழங்குவதன் மூலமும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை விதிக்க முயல்கின்றன.

பல்கலைக்கழகங்களில் ஏற்படும் நிர்வாக முட்டுக்கட்டை அத்தகைய கொள்கைகளுக்கு எதிரான அபாயங்களை வெளிப்படுத்துகிறது. அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் துணைவேந்தர்கள் நியமனத்தில் நீண்டகால தாமதங்களை எதிர்கொண்டுள்ளன. இது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. பல்கலைக்கழகங்களின் நற்பெயரை குறைமதிப்புக்கு உட்படுத்துகின்றன.

புதிய விதிமுறைகளை எதிர்க்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானம் கல்விக்கு கூட்டாட்சி அணுகுமுறையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. மத்திய அரசு இந்த எல்லை மீறிய வழிகாட்டுதல்களை திரும்பப் பெற வேண்டும். கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சியின் அரசியலமைப்பு கொள்கைகளை மதிக்க வேண்டும். இந்தியாவின் பல்வேறு தேவைகள் சமமாக பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்து, மத்திய அரசின் தலையீட்டில் இருந்து விடுபட்டு, அதிகாரம் அளிப்பதற்கான ஒரு கருவியாக கல்வி இருக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+