86000 ஏழைகள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு..ஸ்டாலின் மாஸ் சிக்சர்! புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா
சென்னை: புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய மக்கள் 86,000 பேருக்கு பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், 6 மாதங்களில் பட்டா வழங்கும் பணியை முடிக்க 2 குழுக்களையும் அமைத்துள்ளார். இதன் மூலம் 63 ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழக நிதி நிலை அறிக்கை தாக்க செய்யப்பட உள்ள நிலையில் இந்த கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதன்படி தான் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய மக்கள் 86,000 பேருக்கு பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், 6 மாதங்களில் பட்டா வழங்கும் பணியை முடிக்க 2 குழுக்களையும் அமைத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு.. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் "பெல்ட் ஏரியாக்களில்" ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளோம்!
6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்! உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications