Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்விட்ச் போர்டில் எமன்.. சென்னையில் தவறுதலாக கொசு மருந்து குடித்த குழந்தை உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தவறுதலாக கொசு மருந்தைக் குடித்த 2 வயது குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தது.

சென்னை மணலி மாத்தூரில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தப்படும் மருந்தை குடித்த இரண்டு வயது குழந்தை லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

A 2-year-old child died in hospital after taking mosquito repellent by mistake in Chennai

சென்னை மணலி மாத்தூரை சேர்ந்த நந்தினி என்பவரின் மகள் லட்சுமி இன்று காலை ஸ்விட்ச் போர்டில் பொருத்தப்பட்டிருந்த கொசுவிரட்டி மருந்தை உறிஞ்சி உள்ளார். குழந்தை கொசு விரட்டி மருந்தை உறிஞ்சியதை பார்த்ததும் பதறிப்போய் உடனே அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி குழந்தையின் உயிர் பிரிந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளுக்கு எட்டும் வகையில் கொசு விரட்டி மருந்துகளை வைக்க வேண்டாம். அது சில நேரங்களில் கவனிக்காத போது, இதுபோல் பேராபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

கொசு பத்தி, கொசு விரட்டி எதை தொட்டாலும். உடனே கைகளை சோப்பு போட்டு கழுவி விட்டு, உணவுகளை தொடுங்கள். அப்படியே சாப்பிட வேண்டாம்.குழந்தைகளையும் கொசு விரட்டிகளை தொட்டு உணவு அருந்த அனுமதிக்காதீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+