முதல்வர் பற்றி அப்படி பேசலாமா? அதிகாலை 2.30க்கு பாஜக புள்ளி வீட்டில் குவிந்த போலீஸ்! குமரியில் பரபர!
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முக்கியமான அதிமுக நிர்வாகி ஒருவர் இன்று அதிகாலை போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர்.
பாஜக ஸ்தாபக தின நிகழ்ச்சி தமிழ்நாடு முழுக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6ஆம் தேதி பாஜக சார்பாக கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

என்ன நடந்தது?
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் உரையாற்றினார். பாஜகவின் தேர்தல் வெற்றிகள், பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த வரலாறு, பாஜக கடந்து வந்த பாதைகள் பற்றி அவர் பேசினார். அதோடு தமிழ்நாட்டில் ஏன் பாஜக வளர்ச்சி அடைய வேண்டும். தேர்தல்களில் எப்படி வெற்றிபெற வேண்டும் என்றும் இவர் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில்தான் ஜெயபிரகாஷ் தனது உரையில் பாஜக பற்றி மட்டுமின்றி திமுக பற்றியும் கடுமையாக பேசி உள்ளார். இதில் முதல்வர் ஸ்டாலினை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சில தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஜெயபிரகாஷ் முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயபிரகாஷ் பேசியதை திமுகவினர் பலர் கண்டித்து இருந்தனர்.

விமர்சனம்
முதல்வரை பற்றி ஜெயபிரகாஷ் இப்படி பேசலாமா.. அவர் வேறு கட்சியாக இருந்தால்.. முதல்வர் என்பவர் மாநிலத்திற்கு பொதுவானவர். அவரை தகாத வார்த்தைகளில் அவதூறாக பேசுவது சரியா என்று திமுகவினர் கேள்வி எழுப்பி இருந்தனர். அதோடு திமுகவினர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர். இதையயடுத்து ஜெயப்பிரகாஷ் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது

கைது
இதையடுத்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்ய அவரின் வீட்டிற்கு சென்றனர். இரணியில் அவர் வீடு இருக்கிறது. தகவல் அறிந்து அங்கு வந்த பாஜகவினர், ஜெயபிரகாஷை கைது செய்ய விடாமல் போலீசாரை முற்றுகை செய்தனர். 30 போலீசார் வந்திருந்த நிலையில் 55 பாஜகவினர் போலீசாரை சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.

என்ன நடந்தது
காலை 5..30 மணி வரை போலீசாரை கைது செய்ய விடாமல் அங்கு பாஜகவினர் பிரச்சனை செய்தனர். அவரின் வீடு முன் அமர்ந்து பாஜகவினர் கடுமையாக போராட்டம் செய்தனர். இதையடுத்து அங்கிருந்த பாஜகவினர் ஜெயபிரகாஷை நாங்களே காவல்நிலையத்திற்கு கொண்டு வருகிறோம் என்று உறுதி அளித்தனர். அதன்பின் ஒரு வழியாக பாஜகவினர் சமாதானம் அடைந்து ஜெயபிரகாஷை காவல் நிலையம் கொண்டு வந்தனர். இன்று கீழமை நீதிமன்றத்தில் ஜெயபிரகாஷ் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications