2 வாரம் முன் சென்னையை நோட்டமிட்ட இலங்கை தீவிரவாதி.. உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்.. விசாரணை!
இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் நெருங்கிய கூட்டாளி கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை வந்து சென்றுள்ளார் என்று உளவுத்துறை தெரிவித்து உள்ளது.
Recommended Video
சென்னை: இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் நெருங்கிய கூட்டாளி கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை வந்து சென்றுள்ளார் என்று உளவுத்துறை தெரிவித்து உள்ளது.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமான எல்லோரையும் அந்நாட்டு ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது.
கடந்த 21ம் தேதி ஞாயிறு அன்று இலங்கையில் வரிசையாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். 450க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

சென்னை வந்தார்
இந்த நிலையில் இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் நெருங்கிய கூட்டாளி கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை வந்து சென்றுள்ளார் என்று உளவுத்துறை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை விசாரணை ரிப்போர்ட் ஒன்றை தமிழக போலீசிடம் சமர்ப்பித்து உள்ளது. உடனடியாக இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று உளவுத்துறை கோரியுள்ளது.

எங்கு வந்தார்
அதன்படி ஹசன் என்ற இலங்கையை சேர்ந்த இளைஞர் கடந்த 14ம் தேதி சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. அங்கிருந்து இவர் சென்னை மண்ணடி பகுதிக்கு சென்றுள்ளார். பின் சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி பல்வேறு நபர்களை சந்தித்துள்ளார்.

யார் இவர்
ஹாசீம் என்ற தீவிரவாதிக்கு இந்த ஹசன் மிகவும் நெருக்கமான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்தான் சரான் ஹாசிம். இவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர். இவருக்கு நெருக்கமான நபர்களை உளவுத்துறை தேடி வருகிறது.

ஏன் முக்கியம்
இந்த நிலையில் ஹசன் சென்னை வந்தது ஏன் என்று விசாரணை நடந்து வருகிறது. சென்னையில் இவர் யாரை எல்லாம் சந்தித்தார் என்று விசாரித்து வருகிறார்கள். இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியே வரலாம் என்று கருதப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications