பரோட்டா சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கிய கல்லூரி மாணவர் மரணம்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்
சென்னை: பரோட்டா சாப்பிட்டதால் கல்லூரி மாணவர் பலியானதாக வெளியான தகவல் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை கொளத்தூர் விவி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அரியகுட்டி. இவரது மகன் சிபி சங்கமித்ரன் (17). அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார்.
நேற்று இரவு கடையில் புரோட்டா சாப்பிட்டு விட்டு 10 மணி அளவில் வீட்டிற்கு வந்தார்.

மூச்சு திணறல்
இந்த நிலையில், அதிகாலையில் சிபி சங்மித்ரனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பார்த்தனர். பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தனியார் வாகனத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிபி சங்கமித்ரன் உடலை, கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனை செய்வதற்காக உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பரோட்டா
இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரோட்டோ சாப்பிட்டதால் தான் கல்லூரி மாணவன் சிபி சங்கமித்ரன் இறந்து போனாரா என்பது தொடர்பாக பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காலிஃபிளவர் பக்கோடா
உணவு பொருள் சம்மந்தமான மற்றொரு பிரச்சினை, ஆவடி அடுத்த திருநின்றவூரில் நடந்துள்ளது. அங்குள்ள தனியார் பல்பொருள் அங்காடியில், பானு என்ற பெண், காலிஃபிளவர் பக்கோடா வாங்கியுள்ளார். அதை வீட்டுக்கு கொண்டு சென்றபோது, காலிபிளவர் பக்கோடாவை பானுவின் தங்கை சாப்பிட்டுள்ளார்.

வாந்தி
சாப்பிட்ட சிறிது நேரத்தில், பானுவின் தங்கைக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சந்தேகமடைந்த பானு, காலிபிளவர் பார்சலை திறந்து பார்த்தபோது அதில் ரத்தக் கறையுடன் பேண்டேஜ் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக கடைக்காரரிடம் போய் இதுபற்றி பானு கேட்டுள்ளார். ஆனால், கடை உரிமையாளர், சகோதரிகள் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். எனவே இதுகுறித்து, பானு காவல் நிலையம் மற்றும் உணவு பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அந்த வாடிக்கையாளர் தாய், கூறும்போது, சூப்பர் மார்க்கெட்டில் குழந்தைகள் முதல் முதியவர் வரை பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன இதில் காலிஃப்ளவர் பக்கோடாவை வாங்கி சென்றேன். அதை உண்ட எனது மகள் வாயில் ரத்தத்துடன் இந்த பேண்டேஜ் சிக்கியது. இதையடுத்து கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், சம்மந்தப்பட்ட சூப்பர் மார்கெட், அது, தங்களிடம் வாங்கிய பக்கோடா இல்லை என மறுத்துள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications