சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்.. போன வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. என்ன கொடுமை இது? ச்சே!
சென்னை: சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இன்று அதிகாலை அந்த பகுதியில் பயணம் மேற்கொண்டவர்கள் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே கனமழையால் சாலையில் பள்ளம் உருவானதால் 2 கிமீ தூரத்திற்கு போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது . லாரிகள், பேருந்துகள், சென்னை நோக்கி வருவோர் , சென்னையை விட்டு வெளியே செல்வோர் என்று பலரும் இதனால் பாதிக்கப்பட்டனர்.

ஏற்கனவே சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே சாலை முடங்கி உள்ளது. அங்கே பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன. அப்படி இருக்க இப்போது இந்த சாலைபிரச்சனையும் ஏற்பட்டு உள்ளது. 262-கிமீ நீளமுள்ள பெங்களூர்-சென்னை விரைவுச்சாலை (BCE) முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் தற்போது இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கர்நாடகா மாநிலம் உள்ளே வரும் சாலையில் பணிகள் முடிக்கப்படவில்லை. இதற்கான ஆகஸ்ட் டார்கெட் மிஸ் ஆகி உள்ளது.
இதனால் மொத்தமாக சாலை திறப்பு தள்ளி போகும் வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய பயண நேரமான ஏழிலிருந்து எட்டு மணி நேரத்துடன் ஒப்பிடும்போது, பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை இந்த புதிய சாலை இரண்டு முதல் இரண்டரை மணி நேரமாகக் குறைக்கும். இந்த அதிவேக நெடுஞ்சாலையானது நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 80 கி.மீ வரை குறைக்கும். அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 120 கி.மீ.
BCE திட்டம் என்று அழைக்கப்படும் சென்னை - பெங்களூர் சாலை அதிகாரப்பூர்வமாக NE-7 என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் பெங்களூரு அருகே ஹோஸ்கோட்டையும், தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு சாலையாகும்.
எந்த ரூட்: பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையை டிசம்பர் 2024 க்கு முன் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17,930 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த விரைவுச் சாலை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்லும். ஹோஸ்கோட், மாலூர், பங்காரப்பேட்டை, கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ், வெங்கடகிரிகோட்டா, பலமனேர், பங்காருபாலம், சித்தூர், ராணிப்பேட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள நகரங்கள்.
இந்த நெடுஞ்சாலை 240 கிமீ தூரத்திற்கு எட்டு வழிச்சாலையாக இருக்கும், மீதமுள்ளவை 22 கிமீ உயரம் கொண்ட உயர்மட்ட 8 வழி சாலையாக இருக்கும். சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 21 கி.மீ தூரத்திற்கு 4 வழிச்சாலை இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட சாலை, சுமார் ₹5,850 கோடி செலவில் கட்டப்படும். இதன் மூலம் சென்னை துறைமுகத்திற்கு சரக்குகள் தொடர்ந்து வருவதை உறுதி செய்யும்.
நெரலூர் முதல் தருமபுரி வரையிலான 94 கிமீ நீள நெடுஞ்சாலை (NH-844) சுமார் ₹3,870 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. மீன்சுருட்டியிலிருந்து சிதம்பரம் வரை (NH-277) இணைக்கும் 31 கிமீ 2-வழி நெடுஞ்சாலை சுமார் ₹720 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு நெடுஞ்சாலைகளும் பிராந்தியத்தில் தொடர்ச்சியான இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
2 மணி நேரம் சாத்தியம் இல்லை: இந்த திட்டப்படி இரண்டு மணி நேரத்தில் பெங்களூர் - சென்னை இடையே செல்ல முடியாது. மாறாக கர்நாடகாவின் பெங்களூரு அருகே ஹோஸ்கோட்டையும், தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு சாலையாகும். இந்த இரண்டு பகுதிகளை 2 மணி நேரத்தில் இணைக்கலாம் என்று முதல் கட்ட டெஸ்ட் டிரைவிங் தெரிவிக்கிறது.
சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் முதல் இதுவரை கட்டப்பட்ட சாலைகளில் முதல் கட்டமாக டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளதாம்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி பெங்களூர் மற்றும் சென்னை இடையேயான கிரீன்ஃபீல்ட் காரிடார் மற்றும் பெங்களூரு சாட்டிலைட் டவுன்ஷிப் ரிங் ரோடு (STRR) திட்டம் ஆகிய இரண்டையும் டிசம்பர் 2024 க்குள் திறந்து வைப்பதாக உறுதியளித்து உள்ளார்.
கிரீன்ஃபீல்ட் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்றும் அவர் கூறினார். நேற்று நடந்த கர்நாடக பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டத்தின் பாராட்டு நிகழ்வில் கட்கரி இந்த அறிவிப்பை வெளியிட்டார். ரூ. 17,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் திட்டமிடப்பட்டதை விட ஒரு வருடம் முன்னதாக 2024 டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்று கூறினார்.
டெஸ்ட் டிரைவ்: சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் முதல் இதுவரை கட்டப்பட்ட சாலைகளில் முதல் கட்டமாக டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளதாம்.
ஜூன் 2022 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பெங்களூருவின் சுற்றுப்புறங்களை இணைப்பதையும், நகரத்திற்குள் போக்குவரத்தை 30% குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. 2018ல் அறிவிக்கப்பட்ட ரூ.17,930 கோடி மதிப்பிலான பசுமைத் சாலை திட்டம், ஆறு ஆண்டுகளாக வளர்ச்சியில் உள்ளது, மேலும் இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்படும் என கட்கரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications