சாலையில் கட்டுக் கட்டாக பணம்.. நங்கநல்லூர் உமாபாரதி செய்த சூப்பர் செயல்.. குவியும் பாராட்டு
சென்னை: சென்னை, நங்கநல்லூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி உமாபாரதி என்பவருக்கு சாலையில் கிடைத்த பை ஒன்றில், 2 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அவர் செய்த செயல் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டடத் தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிக்கு ரூ. 2 லட்சம் அடங்கிய பணப்பை ஒன்று கிடைத்துள்ளது. அதனை மீட்டு போலீஸில் ஒப்படைத்த, உரியவரிடம் வழங்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்தவர் உமாபாரதி. இவர் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையை உமாபாரதி எடுத்து பார்த்துள்ளார். அந்தப் பையில், ரூ. 2 லட்சம் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பணத்தை யாரோ ஒருவர் தவறவிட்டுள்ளனர் என்பதை அறிந்த உமாபாரதி, உரியவரிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.
அப்பகுதியில் உள்ளவர்களிடம் பை எதாவது கேட்டு யாராவது வந்தார்களா என்று அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். ஆனால், பையை கோரி யாரும் அங்கு வரவில்லை. இதையடுத்து, உடனடியாக பணப்பையுடன் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
சாலையில் கிடைத்த பணப் பையை போலீசாரிடம் உமாபாராதி ஒப்படைத்தார். இதையடுத்து, பணப் பையை காவல் துறையினர் சோதனை செய்தபோது அதில் செல்போன் எண் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து, அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்ட போலீசார், பணத்தை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
சாலையில் கிடைத்த பையில் இருந்த பணத்தைப் பார்த்ததும் தனக்கென கிடைத்தது என எடுத்துக் கொள்ளாமல் உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட கட்டடத் தொழிலாளி உமாபாரதியின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. பணத்தை ஒப்படைத்ததற்காக கட்டிட தொழிலாளி உமாபாரதியின் நேர்மையைப் பாராட்டி போலீசார் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications