இனிதான் இந்த பாட்ஷாவோட ஆட்டம்.. ‘அண்ணா’வின் தூக்கத்துக்கு ‘ஆட்டோ பாம்’ வைக்கும் திருச்சி தம்பி!
சென்னை: தமிழ்நாட்டில் 'தம்பி' என்ற சொல்லுக்கு ஒரு மரியாதை இருந்தது. தம்பி வா தலைமை ஏற்க வா என்ற அண்ணாவின் அழைப்பு அத்தனை கம்பீரமானது. ஆனால் அரசியல் களத்தில் 'தம்பி' என்ற சொல் படும்பாடு இருக்கிறதே.. அவமானமான கூத்து.
'இன்ஸ்டன்ட்'டாக முளைக்க போராடும் கட்சியின் திருச்சி தம்பிதான் சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சைகளுக்கு பெருந்தீனி போட்டவர். இப்போதைய அரசியல் 'அண்ணா' என அழைப்பவரின் வலது கரமாக ஆல் இன் ஆல் அழகுராஜாக கெத்து காட்டியவர். 'ஏகாந்த' பொழுதில் 'ஏடா' கூடாமாக பேசி ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். அப்போது என் தம்பி மாதிரி என அந்த பெண்மணி சொன்னது கரகாட்டக்காரனில் செந்திலை கோவை சரளா சொன்னது போலவே பலருக்கும் உணர்த்தியது.

திடீரென சைலண்ட் மோடில் போன அந்த திருச்சி தம்பி இனிமேல்தான் தன்னுடைய ஆட்டமே ஆரம்பம் என தோள் தட்டி இருக்கிறார். என்னவாம் பிரச்சனை என கேட்டால், 'அண்ணா' ரொம்பவே ஆடிகிட்டுதான் இருந்தார்.. நானும் பக்கவாத்தியமாகத்தான் இருந்தேன்.. பெரிய கட்சி ஒன்னு அழைச்சுகிட்டு இருக்கு... விரைவில் ஐக்கியமாவேன்.. அப்போ பாருங்க பாட்ஷாவோட விளையாட்டை என்கிறார். அத்துடன் நிற்காமல், என்னைக்கு நான் அங்க கால் வைக்கிறேனோ அன்றைக்கு 'அண்ணா'வோட அத்தனையையும் ரிலீஸ் செய்துவிட்டுதான் ஓய்வேன்.. அந்த அளவுக்கு துரோகம் செஞ்சுட்டாரு.. என்னத்தை சொல்றதை என சீற்றமும் புலம்பலமுமாக திருச்சி மலைக்கோட்டையில் முட்டிக் கொண்டு நிற்கிறாராம்.












Click it and Unblock the Notifications