நாராயணப்பா தாத்தாவிடம் கவுடாவா? என கேள்வி கேட்ட ஸ்டாலின்... சர்ச்சையாக்கப்படும் வீடியோ
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு வீடியோவையும் முன்வைத்து ஏதேனும் ஒரு சர்ச்சையை கிளப்புவது என்பது வழக்கமாகிவிட்டது.
சென்னையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட எதிர்க்கட்சிகளின் பேரணி நடைபெற்றது. இது தொடர்பாக ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இப்பேரணியில் பங்கேற்ற 89 வயது நாராயணப்பா தாத்தா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவரை சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வரவழைத்து ஸ்டாலின், சிறப்பித்தார்.
இது தொடர்பான வீடியோ ஒன்றை வைத்துதான் இப்போது சர்ச்சையாக்கப்படுகிறது. நாராயணப்பா தாத்தா ஸ்டாலினிடம் வெகு யதார்த்தமாக ஏதோ சொல்கிறார்.. (கன்னடத்தில் சொல்வது போல் உள்ளது)
Hosur. So Gowdavaa??
— Mark Antony (@hunmid12) December 25, 2019
Though this can be potrayed as a politician knowing the prominent caste in the region, putting myself in his shoes,will be embarrassing to get questioned about my caste by my native place.@sumanthraman sir your POV on thispic.twitter.com/osDNPVMFQk
அப்போது எந்த ஊர்? என ஸ்டாலின் இயல்பாகவே கேட்கிறார்.. ஓசூர் என நாராயணப்பா பதில் கூறிய உடனேயே 'கவுடாவா' என கேள்வி கேட்டபடியே அவரை போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்கிறார் ஸ்டாலின்.
இதனை மையமாக வைத்துதான் நாரயணப்பா தாத்தாவிடம் ஜாதியை கேட்டுவிட்டார் ஸ்டாலின்... திமுக ஜாதிய கட்சி என்பதை நிரூபித்துவிட்டது என்கிற பிரசாரத்தை படுதீவிரமாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications