Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெட்டுப்போன சிக்கன்.. சென்னையில் உள்ள பிரபல பிரியாணி கடைக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொடுங்கையூர் வாசுகிநகரைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், பிரபல பிரியாணி கடைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கெட்டுப்போன சிக்கனை வழங்கியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரபல பிரியாணி கடைக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை உள்பட தென் மாவட்டங்களில் புரோட்டா மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத ஒன்றாக பிரியாணி கடைகள் மோகம் சென்னையில் அதிகமாக இருக்கிறது. சென்னையில் காலையில், மதியம், இரவு, நள்ளிரவு, அதிகாலை என எல்லா நேரமும் பிரியாணி சாப்பிடுகிறார்கள். இந்த ஆர்வம் காரணமாக ஏராளமான பிரியாணி கடைகள் சென்னையில் முளைத்தபடி உள்ளன. அதேநேரம் பிரியாணி கடைகளை பொறுத்தவரை சில நேரங்களில் கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் வருகின்றன. அப்படி ஒரு புகார் பற்றி தான் பார்க்க போகிறோம்.

A famous hyderabad biryani shop in Chennai was fined Rs 75 000 for serving spoiled chicken

சென்னை கொடுங்கையூர் வாசுகிநகரைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "கடந்த 16.9.2024 அன்று கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடையில் சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் பால்ஸ் வாங்கினேன். இந்த பிரியாணியை சாப்பிட்ட எனக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். சுகாதாரமற்ற, கெட்டுப்போன சிக்கனை வழங்கியதால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, பிரியாணி கடை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மனுதாரர் பிரியாணி வாங்கிய தினத்தன்று மேலும் 578 பேர் சாப்பிட்டு உள்ளனர். உடல்நல பிரச்சினை ஏற்பட்டதாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை. மனுதாரர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் நஷ்டஈடு கோருகிறார். எங்கள் கடை சென்னையில் மட்டும் 24 இடங்களில் செயல்படுகிறது. இதுவரை எந்த புகாரும் இல்லை" இவ்வாறு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும் வழக்கை விசாரித்த சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் ஆணையம், 'சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரியால் இந்த பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டு 10 நாட்களுக்கு பின்பு மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த பிரியாணி கடை உணவு பொருட்களை சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்ததையும், சமையலறை சுகாதாரமற்ற நிலையில் இருந்ததையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்திருக்கிறார்கள்.

கெட்டுப்போன உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்ததாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் மேற்படி பிரியாணி கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் தயாரித்ததற்கு தெளிவான ஆதாரம் இருக்கிறது. எனவே, சேவை குறைபாட்டுக்காக மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதேபோன்று ராதிகா என்பவர் இந்த கடை மீது தொடர்ந்த வழக்கில், அவருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+